கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 8, 2012

கனவிற்கு அர்த்தம் கூறுங்கள்..

ஓடம் பழுதாகி கரை சேர்ந்த துண்டு மரத்தில் ஒட்டி கொண்டிருந்தேன் உயிரும் உடலில் அப்படித்தான்... இருள் சூழ்ந்து சல சல சத்தத்தில் துளி தண்ணீர் என் முகத்தில் பட்டு விழித்து பார்த்தேன் வியப்பில் ஆழ்ந்தேன் உயிர் போனது என்று மூழ்கியவன் இருளில் மூழ்கி கொண்டிருக்கிறேன்.... அலறல் சத்தம் அழுகை சத்தம் குறைத்தல் சத்தம் என்னை குலைய செய்தது உடலை வளைய செய்தது சத்தமிட்டேன்.... தண்ணீரை உயிர் தான் என்றேன்... கிடைத்தது தனிமை.. முழ்கி இருந்தால் சேர்த்திருப்பேன் காற்றோடு மூழ்காமல் சிக்கித்தவிக்க என்ன பாவம் பண்ணேனோ துளி துளியாய் உயிர் பிரிந்தது... கனவு கலைந்தது.. கனவிற்கு அர்த்தம் சொல்லும் பெரியோர்களே.... இந்த கனவிற்கு அர்த்தம் கூறுங்கள்.... த. நாகலிங்கம்

Monday, September 24, 2012

அநாதை இல்லம்


எண்ணற்ற குழந்தைகளை
வளர்க்கும் மாற்றாந்தாய்
கருவறை.....

நான்

எனக்கு தெரியும் இப்படியெல்லாம் நடக்குமென்று என கடைசியில் கூறுபவனல்ல நான்..... முதலில் எச்சரிப்பேன் பிறகு எடுத்துரைப்பேன் மீறினால் அமைதியாவேன் பட்டு தெளிந்து உணர்ந்து முடித்து வரும்போது வாரியணைப்பேன் காயப்பட்ட நெஞ்சுக்கு மகிழ்ச்சி மருந்தளிப்பேன் நான்... த.நாகலிங்கம்

Thursday, January 5, 2012

நட்பே நலமா..?


உன்னை சிதைக்க
காத்திருக்கும் கயவர்கள்
மத்தியில் ஜாக்கிரதை...
நட்பை பற்றி கவிதை
படைப்பார்கள்...(சிலர்)
நட்பை காலில் மிதிப்பார்கள்
நட்பே நலமா...?
நீ தான் உயிர் என்பார்கள்
முதுகில் ____ என்பார்கள்
நட்பே நலமா?

நட்பே சிறந்தது...


நண்பனாக இருக்க தகுதிகள்
தேவை இல்லை
நட்புக்கு உறவுகள்
தூரம் இல்லை
துரோகத்திற்கும் அன்பை
காட்டும் நட்பே சிறந்தது
அடித்தாலும் அனைத்துகொள்ளும்
நட்பே உயர்ந்தது
நொறுங்கிய கண்ணாடி சேராது
விரும்பிய நட்பு உடையாது
காலங்கள் பல கடந்தாலும்
நட்பு மறையாது
அன்பு குறையாது
நட்பு தான் அடித்தளம்
நான் வாழ நட்பே அடையாளம்

அநாதை இல்லம்


எண்ணற்ற குழந்தைகளை
வளர்க்கும் மாற்றாந்தாய்
கருவறை.....

முரண்பாடு


உள்நாட்டிலே அமைதி இல்லை
வெளிநாட்டினை குறைசொல்லும்
இந்தியா?

பண்பாடு


எண்ணெய் வாங்க தான்
காசில்லை அப்போது
என்னை வாங்கவே
விருப்பமில்லை இப்போது..
படுகுழி ஜனநாயகம் ...

தன்னை அறி...


சக்தியை உணராமல்
சகதியில் உழலும்
மனித இனம் அழிந்தாலும்
நல்லது தான்....

நிழல் என்பது நிஜமா ?


நிழலில் நிஜம்
இருக்கலாம்
நிஜத்தில் நிழல்
இருப்பது
நிழலின் நிஜத்தை
உணராமல்
மடிந்து விடும்

நீ.. நான்.. நாம்..


நீ என்பது ஏமாற்றம்
நான் என்பது முன்னேற்றம்
நாம் என்பது உயர்வு
இது தான் வாழ்வின்
தத்துவம்...
புரிந்தோர்க்கு இதுவே
மகத்துவம்...

நட்பின் புற்று நோய்..


விளைவது தெரிந்தால்
கிள்ளிவிடலாம்,,,
விளையாமல் அழிந்தால்
தள்ளிவிடலாம்..
தெரியாமால் விளைந்து
முதுகிலே மறைந்து
உயிரினை எடுப்பதை
என்ன செய்யலாம்?

வாழ்க காதல் வளமுடன் ...

கண்களை மூடாமல் 

வந்த கனவு

நீ தானடி...
பலிக்காது என்று
உபதேசம் செய்த
மனதை நொறுக்கி
உணர்வை நறுக்கி
உன்னை சுற்றினேன்
உள்ளம் வற்றினேன்
சோலைவன வாழ்வு
பாலைவனமாக நான் தான்
காரணம் அதை யார் தான்
கூறனும்...நீ செழித்தாய்
என் கனவினை அழித்தாய்
முற்றும் துறந்தவனாய்
அலைகிறேன்....
மூடன் பட்டம்
பெறுகிறேன்...
வாழ்க காதல் வளமுடன்...