கண்களை மூடாமல்
வந்த கனவு
நீ தானடி...
பலிக்காது என்று
உபதேசம் செய்த
மனதை நொறுக்கி
உணர்வை நறுக்கி
உன்னை சுற்றினேன்
உள்ளம் வற்றினேன்
சோலைவன வாழ்வு
பாலைவனமாக நான் தான்
காரணம் அதை யார் தான்
கூறனும்...நீ செழித்தாய்
என் கனவினை அழித்தாய்
முற்றும் துறந்தவனாய்
அலைகிறேன்....
மூடன் பட்டம்
பெறுகிறேன்...
வாழ்க காதல் வளமுடன்...
No comments:
Post a Comment