கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 31, 2011

7 ஆம் அறிவு

அறிவாளிகள் புரிந்து கொள்ளும்
ஆதங்கம்...
தமிழர்கள் தலை நிமிரும்
அற்புதம்...
யதார்த்தத்தை எட்டி பார்க்கும்
தனித்துவம்...
உணர்வுகளை தூண்டி விடும்
உன்னதம்...
நம்பிக்கையை அவிழ்த்துவிடும்
தத்துவம்...
மொத்தத்தில் 7 ஆம் அறிவு
புதுமையான தெளிவு....

த. நாகலிங்கம்

வலைதளம்

மனிதனை வலை போட்டு
இழுக்கும் தளம்...
நல்லதை கொடுக்கும்
தளம்..
கெட்டதும் பரப்பும்
தளம்...
எல்லாவற்றிக்கும்
வளைந்து கொடுக்கும்
வலைதளம்...
பெரிய விலை தளம்!

த. நாகலிங்கம்

வேலாயுதம்.....

வேல் போன்ற
விழி ஆயுதத்தால்
கொல்ல துடிப்பவளே
நான் ஏற்கனவே
இறந்து விட்டேன்
உன் புன்னகையின்
அழகில்....

த. நாகலிங்கம்

Saturday, October 29, 2011

புன்னகை

உள்ளத்தின் சோகத்தை
மறைக்க உதடுகளின்
நாடகம்...

த. நாகலிங்கம்

நட்பு என்பது காதலில்லை...

காதல் என்பது
மல்லிகை
நல்ல வாசனை
வாடிவிடும் மறு நாள்
நட்பு என்பது
வாடாமல்லி
வாசம் இல்லாவிட்டாலும்
எப்போதும் வாடாது.....

த. நாகலிங்கம்

Tuesday, October 25, 2011

சாதிக்க நினைப்பவளே...

ஏன் சிரிக்கிறாய்?
ஏன் அழுகிறாய்?
சமுகத்தின் சந்தேக
கேள்விகளுக்கு
மௌன பதிலளி
நேரம் மிச்சமாகும்
உன் வாழ்வு வெற்றி காணும்..

த. நாகலிங்கம்

அமைதி...

உன்னை தேடினேன்
உள்ளம்  போர்களமானது
எங்கே சென்றாய்..

த. நாகலிங்கம்


அழகிய நட்பு...

வானத்தை ஓசோன் காக்கும்
மானத்தை நட்பு காக்கும்
தமிழுக்கு வேண்டும் இலக்கணம்
நட்புக்கு  வேண்டாம் தலைக்கனம்
நட்பும் ஒரு வகை உறவு
நட்புக்கு வேண்டாம் துறவு
நட்புக்கு போடு வேலி
நட்பை செய்யாதே கேலி
நட்புக்கு இல்லை மொழி-இது
நட்பின் தனி வழி 
நட்பும் கப்பலும் ஓன்று தான்
மனஸ்தாப துளை விழாத வரை
நட்பும் தென்றலும் ஓன்று தான்
பிரிவென்னும் சூறாவளியாய்
மாறாத வரை...

த. நாகலிங்கம்


நட்பை போல நல்ல வார்த்தை ஏதும் இல்லையே...

நட்பை போல நல்ல வார்த்தை
ஏதும் இல்லையே...
நட்புக்கொரு ஈடு இணை
என்றும் இல்லையே...
சொல்லிகொள்ளும் இன்பம் மட்டும்
இங்கும் இல்லையே
எங்கும் இல்லையே ....

உறவை தேடும் உயிரில் வாழும்
நட்பை சேருங்கள்...
உலகம் மாறும் வாழ்வும் மாறும்
உண்மை காணுங்கள்...
பிறந்த பயனை முழுமை செய்யும்
நட்பே சிறந்தது...
நட்பில் வாழ்வில் நண்பர் கூட்டம்
வாழ்வில் உகந்தது...

தோல்வி வந்த போதும்   நட்பு
வெற்றி கொடுக்கும்...
வெற்றியாலே வந்த வாழ்வு
நட்பில் சிறக்கும்...
சின்ன சண்டை வந்த போதும்
கூட பாசம் இருக்கும்
பாசத்தாலே வேஷம் எல்லாம்
ஓய்வு எடுக்கும்


த. நாகலிங்கம்


உன் வார்த்தை என்னோடு தீ தான்....

இளந்தென்றல் என் நெஞ்சில் கவிதையாய் மாறும்
கரும்பூக்கள் பூக்கின்ற உலகத்தை தேடும்
கடல் நுரையில் உன்னை செதுக்க காதல் உளி போதும்
தாமரையின்  மொட்டுக்குள் நாம் வாழ தோணும்
இது தானே காதல் இதயங்கள் மோதல்
கூண்டோடு பறக்கின்ற இரு பறவை கூடல்

காதோரம் தேனான உன் சிணுங்கள் மொழியால்
கட்டுடம்பு உருகியது உன் பார்வை விழியால்
கல்லூரி கலர் கனவு காலங்கள் விழுங்கும்
கரம் சேர உன் ஆவல் என்னோடு மயங்கும்
கருவான நம் காதல் உருகாக நீ தான்
கனிவான உன் வார்த்தை என்னோடு தீ தான்.


த. நாகலிங்கம்


Monday, October 24, 2011

ஒரு பாடல் கவியானது...

அணு அணுவாய் என் இதயம் உயிர் வாங்குதே
ஆசையாலே என் இளமை ஆர்பரிக்குதே
கனவாலே என் இமைகள் கரைந்தோடுதே
கருவிழியை உன் பிம்பம் சிவப்பாக்குதே

ஆண்: நீ தானே சூரியன் நான் பூமியாகிறேன் 
           தன்னாலே சுற்றியே உன்னை நான்  பார்க்கிறேன்
           வாராதோ மீன் என்று வெண் கொக்காய் வாழ்கிறேன்
           விழலோடு நெற்கதிராய் முதிராமல் நிற்கிறேன்
           கரு மீன்கள் கடல் நீரை நிறம் மாற்ற கூடுமோ?
           வானத்தை சூரியனும் நெருப்புக்கிரை ஆக்குமோ?
           நீ எந்தன் சூரியனாய், நான் உந்தன் கரு மீனாய்
           காலங்கள் கடந்து நாம் காவியம் பாடுவோம்
           பரம்பரையை தொடர புது ஓவியம் தேடுவோம்...

பெண்: நீ தானே என் கடவுள் நான் பக்தை ஆகிறேன்
           ஆண்டாளாய் உருமாறி உன்னோடு சேர்கிறேன்
           சுட்டாலும் வெண் சங்கு நிறம் போலே வாழ்கிறேன்
           கொதித்தாலும் பால் சுவையும் குன்றாமல் இருக்கிறேன்
           ஒரு செடியில் பல வண்ண பூக்கள் தான் பூக்குமோ
           பூ மதுக்கள் வண்டில்லாமல் தேனாக மாறுமோ
           நீ எந்தன் தேன் வண்டாய் நான் உந்தன் பூ செடியாய்
           வார்த்தைகளே இல்லாத கவியாக வாழுவோம்
           பின்னோர்கள் நம் புகழ் உணர புதுக் கவிதை தேடுவோம்

த. நாகலிங்கம்

நானே நீ தானே....நீயே நான் தானே

படைத்தேனே என்னை படைத்தேனே
உன்னில் என்னை வளர்த்தேனே....
இறைவன் உன்னை படைத்தானே
என் உயிரை உன்னிடம் அடைத்தானே

தெருவினில் உன்னை பிடித்தேனே
உறவினில் உன்னை வடித்தேனே
காலம் எல்லாம் ஒன்றாய் பிறக்க
காதல் கடிதம் வடித்தேனே...
உன் முகத்தை நானும் பார்க்கையிலே
ஒவ்வொரு அணுவிலும் வலிக்கிறதே...
நீயும் வந்து உன்னை தந்து
வலியை சேர்ந்து அனுபவிப்பாய்
புனிதம் நீ தானே என் புதினம்...
நீ தானே என் உயிரில்
என் இளமை வெடித்திடும் சரி தானே...

எண்பது தடைகள் வந்தாலும்
எண்ணியதை நான் முடிப்பேனே
காண்பது எல்லாம் கனவாய் சென்றால்
கனவை நானும் உடைப்பேனே
என் ரத்தம் மண்ணில் பாய்ந்தாலும்
உன் ரத்தம் என்னில் உயிர் கொடுக்கும்
உள்ளம் என்னும் உரம் கொண்டு
செடியாய் காதலை வளர்ப்பேனே...
நானே நீ தானே....நீயே நான் தானே
என் இளமை உன் இளமை
ஒன்றாய் சேரும் வரம் தானே.....

த. நாகலிங்கம்


வாழ்கிறேன் உனக்காக....

அன்பே....
நான் ஷாஜகான் இல்லை
நீ எனக்கு முதல் மனைவி தான்
அதற்காக தான் உனக்கு
தாஜ்மஹால் கட்டவில்லை என்று
எண்ணாதே....
நான் அவனை போன்ற செல்வ செழிப்பு
பொருந்திய அரசன் இல்லை....

வருகிறேன் நீ இல்லாத எமலோகத்தில்
வசிக்க நான் விரும்பவில்லை...
நீ அங்கேயே இரு....
மறு திருமணத்திற்கான ஏற்பாடுகளை
செய் சொர்க்கத்தில்....
மலையின் உச்சியோ? ஒரு பாட்டில் விஷமோ?
மின்விசிறியில் கயிறோ?...
நான் உன்னை அடையும் வழி தேடி கொடுக்கும்

கல்லறை கட்டி உன்னை
அடைக்க விரும்பாதவன்... நான்
மெல்லிய காற்றிலே இதமான
மனதுடன் மெதுவாக மணம்
வீசி சுற்றி திரிந்து கொண்டிரு
நானும் காற்றில் கலக்க
சில நிமிடங்கள் போதும்....

உன்னால் பிறந்த உயிரை
விட்டுவிடலாமோ......?
ம்மா ம்மா  ம்மா  சொல்லும்
மழலை குரலை கேட்கிறாயா?
எனக்காக வாழ்ந்த நீ...
உனக்காக யார்? நான் தான்...
வருகிறேன்... காத்திரு....

காற்றிலே ஜன்னல் கதவு ஆடினால்
நீ தானோ?... சிந்திக்கிறேன்
காகம் பார்த்தாலும் உன் நினைவு தான்..
யாரோ கதவை தட்டினார்கள்
ஒரு இரவில்.... திறந்தேன்
உன் எதிர்ப்பார்ப்புகளோடு...
ஏமாற்றம் தான்.... அது நீயில்லை
என் தாய்... விளக்கை அணைத்துவிட்டு
தூங்கு... சொல்லிவிட்டு சென்றார்கள்
என் காதில் விழவில்லை...
நீயே ஒலித்து கொண்டிருக்கும்
காதுகளில், மற்றவர்கள் பேச்சு
செவிடன் காதுகளில் சங்கு தானே...
வருகிறேன்... காத்திரு...

சில நிமிடங்கள் தான் உன்னை அடைய
இல்லை... இல்லை ... ஒரு நொடி போதும்
ஐயோ... உன்னால் உதித்த உயிரை
நீ தான் தவிக்க விட்டு சென்றாய்...
நானும் அப்படி செய்தால்...
உன் மனம் தாங்குமா...
ம்மா.. ம்மா.. சொல்லும் மழலை
குரலை கேட்கிறாயா?

நம் பயிரை நாமே அழிக்கலாமோ?
வேண்டாம் வேண்டாம்
வேரூன்ற செய்து வருகிறேன்
அதுவரை காத்திருப்பாயா
என் செல்லமே...
காத்திரு நிச்சயம் வருகிறேன்...

காத்திரு வருகிறேன்...
என் தெய்வமே...
அவன் அப்பா சொல்லும் அழகு...
ஆயிரம் கவிஞர்களும் வர்ணிக்க...
தகாதது.....
விட்டு வர மனமில்லை... இருந்தாலும்
வருகிறேன்...
தெருவோரம் தூக்கி செல்லும் என்னை
அம்மா கேட்கிறான்... நான் என்ன செய்ய..
வேதனை வாட்டுகிறது..
இப்போதே உன்னை அடைய மனம்
தவிக்கிறது...

உன் மாமியாருக்கு புரியவைத்தாலும்
உன் மகனுக்கு  அம்மாவை
எங்கு தேடுவேன்...
உன் போல் பாசம் எவரும் தருவாரோ.?
என் மனம் தவிக்கிறதே....
நான் வருகிறேன் காத்திரு.....

எனக்காக அல்ல நான் காமுகனும் அல்ல
உன் உயிர் மகனுக்காக...
ஒரு அம்மா... இவள் தான்....
அந்நியம் அல்ல.... உன் தமக்கை தான்...
இருந்தாலும் உன்னை அடைவது
நிச்சயம்.....
வருகிறேன் காத்திரு....

அடம் பிடிக்கிறான் உன் மகன்...
தங்கச்சி பாப்பாவிற்கு...
நான் என்ன செய்ய....
உன் முக சாயலை 
விதைத்து சென்றவள் என் மகள்....
நீயே வந்தாயோ என் மகளாக
நான் வருவது தாமதமானதால்...


நீயே என்னை தேடி வந்துவிட்டாய்
காத்திரு.... வருகிறேன்... இது
அர்த்தமில்லாத வார்த்தையோ?
உனக்காக வாழ்கிறேன்...
இனி நீ தான் என் மகள்....

இறந்தவள் உயிர்த்தெழுந்தாள்..
என் மகளாக....
எனக்கு நீ தான் ஏசு...
பெண் ஏசு....
வாழ்கிறேன் உனக்காக....

த. நாகலிங்கம்


Sunday, October 23, 2011

அன்பான தோழிக்கொரு....

அன்பான தோழிக்கொரு
நட்பாலே வாழ்த்து பாடினேன்
தானா தானா  தானா
உன்னாலே நானும் பெற்ற
இன்பங்கள் எண்ணி பார்க்கிறேன்
தானா தானா  தானா
சொந்தங்கள் எல்லாம்
உன்னாலே தானே
சொர்க்கத்தில் வாழும் நம்மாலே
தானே தானே....

யார் யாரோ வந்தார்கள்
நண்பர்கள் என்றார்கள்
பொய்யான வார்த்தை நம்பி
ஏமாந்தேன் சில காலம்
உயிர் என்று சொன்னார்கள்
உறவாக நின்றார்கள்
துன்பத்தில் நானும் பார்த்தேன்
ஓடோடி சென்றார்கள்
நீ தானே என்னோடு
உண்மைகள் தந்தாயே
நானென்ற வார்த்தைக்குள்ளே
நீயாகி நின்றாயே
உன்னை பிரியா வரமும் ஒன்றை
வேண்டுகின்றேன்..
யாராலும் பிரிக்கா சக்தி
தேடுகின்றேன்...
உன்னோடு இணையாத நட்பொன்றும்
நட்பல்ல....

ஆணோடு நட்பென்றால்
பெண்ணுக்கு அவமானம்
சமூகத்தின் வார்த்தையெல்லாம்
நம்மாலே உடைபடுமே...
சமுதாய பார்வைகளில்
நட்புக்கு இழிவென்றால்...
போராடி வெற்றி காண்போம்
நட்போடு இறந்திடுவோம்
நம் நட்பு காதலாக மாறாது..
எந்நாளும்...
காதலாக மாறும் நட்பு
ஒருபோதும் உண்மையில்லை
இது தானே நானும் கண்ட உண்மை மொழி
பழுக்காத வயசுக்கெல்லாம் செம்மை மொழி
முடியாது நட்பென்னும் இதமான ஆரம்பம்..

த. நாகலிங்கம்



நீ தானே .. என் தெய்வம்...

உறவான மனம் எல்லாம் உருவாகுதே
இறைவா, உன் பெயராலே கருவாகுதே
சிறகின் நிழலில் கருணை பொழியும்
தலைவா நீ வருவாய் புகழ் சேர

தாய் என்னை மறந்தாலும், துறந்தாலும்
பிரிந்தாலும் நீ என்னை பிரியாத
நிலை வேண்டுமே...
மலை போலே துன்பங்கள் எந்நாளும்
வந்தாலும் பனிபோல துளியாக
உருவாகுமே...
ஆண்டொன்று உன்னை பார்த்தால்
நொடி போலே உருண்டோடும்
அன்பான முகம் கொண்ட திரு நாயகா
ரத்தத்தை ரசமாக்கி தந்தாயே வென்றாயே
பாவங்கள் தசையாலே நீ மாற்றினாய்
உன்னை பாட மொழி ஏது...

அருளாகி பொருளாகி இசையாகி
வரமாகி உலகுக்கு ஒரு தேவன் 
நீ தானையா....
இன்பங்கள் உருவாக துன்பங்கள்
பல பெற்ற இறை தெய்வம் நீ இன்றி
வேறேதைய்யா....
ஆசைக்கு அளவாகும் ,உன்னோடு
நான் சேரும் பேராசை வரமொன்று
தருவாயப்பா...
ஒரு கோடி சொந்தங்கள் இருந்தாலும்
கரைந்தாலும் உன் சொந்தம்
ஒன்றுக்கு ஈடாகுமா....
நீ தானே என் பந்தம்...


த. நாகலிங்கம்


லாப்டோதெரப்பி ...

சிரித்தால் நோய் விட்டு போகுமாம்
பணக்காரர்கள் கூடி சிரிக்கிறார்கள்
கடற்கரையில்......
பணம் இயற்கையின் சிரிப்பை
அபகரித்து சென்றதோ?
இரும்பு பெட்டிக்குள் சந்தோசம்
தூங்கி கொண்டதோ?
யார் அழுதால் நமக்கென்ன
என்றிருந்தால் செயற்கை
சிரிப்பு தான் எப்போதும்...
ஆனவ சிரிப்பா?....
ஆவண சிரிப்பா?...
புரியவில்லை கண்ணீருக்கு
அனைத்திலும் செயற்கை
ஒட்டி கொண்டது....
சிரிப்பிலும் தான்...
வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டு போகுமாம்
சிரியுங்கள் சிரியுங்கள்
உண்மை சிரிப்பை தொலைத்து
பொய்மை சிரிப்பில் புதைந்து
போங்கள்....
இது லாப்டோதெரப்பி இல்லை
ஏழைகளின் வியர்வை சுரப்பி
வயிற்றுக்காக அழுதுகொண்டிருக்கும்
அபலைகள் மத்தியில்
உங்கள் சிரிப்பொலி சிகரம்
அடையட்டும்...
தப்பில்லை குற்றமும் இல்லை
உணருங்கள் புரியும்...

த. நாகலிங்கம்


அனிமேஷன்...

ஆயிரம் ஆயிரம் அறிவியல்
முன்னேற்றங்கள்
அனைத்தும் மனித குல
மாற்றங்கள்
விலங்கினங்கள் விதி விளக்கா?
மனிதன் கண்ணில்...
மனிதனை புரட்டி  போடும்
இயந்திர உலகின் விந்தை
அனிமேஷன்
சிரிக்கும் சிங்கமா?
பேசும் புலியா?
எல்லாமே சாத்தியம் தான்
இந்த கணினி யுகத்தில்
திரை உலகினரையும்
திக்கு முக்காட வைக்கும்
அபார வளர்ச்சி இது
முன்னேற்றங்களின் கிளர்ச்சி
மனதில் உள்ள கனவுகளையும்
காட்சியாக்கும் அனிமேஷன்
சாத்தியமில்லை என்னும்
வார்த்தையும் உடைபடும்
இந்த அனிமேஷனால்
நீ பறக்க வேண்டுமா?
உலகம் நினைக்க வேண்டுமா?
புறப்பட்டு மாயா உலகுக்கு
3 D  என்னும் தொழில் நுட்பத்தை
உன் அறிவால் திருடி
விந்தைகளை சந்தைகளாக்கு
அடுத்த பில் கேட்ஸ் நீ தான்....


த. நாகலிங்கம்

எது காதல்?... எது காமம்... ?

கற்பனையில் மிதக்கும்
கவி பிறக்கும்... இது காதல் என்பேன்
கண்ணெதிரில் இருக்கும் உண்மை
மறைக்கும்... இது காமம் என்பேன்
காதலலைகள் இன்பம் கொடுக்கும்
காமம் அதிலே வாசம் கெடுக்கும்
உண்மை காதல் நெஞ்சின்
ஆழம் வரைக்கும்........

அறியாத வயசுக்குள்ள காதல் இல்லையே
தெரியாத மனசுக்குள்ள காமம் இல்லையே
பார்த்தாலே வரும் காதல் உண்மை இல்லையே
உணர்வாலே வரும் காதல் என்றும் தொல்லையே
சொல்லவா எது உண்மை காதலே
வயசுக்குள் வரும் முதிர்வு காதலே
காதல் ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை...

புரியாத வார்த்தைகளும் காதல் இல்லையே
குறையாத அன்பதனில் மோகம் இல்லையே
கனியாத கனவுக்குள்ள உண்மை இல்லையே
பணத்தாலே வரும் காதல் என்றும் தொல்லையே
சொல்லவா எது உண்மை காதலே
குணத்திலே வரும் இன்பம் காதலே
காதல் என்றும் மனதில் உறங்கும் மிருகம்...


த. நாகலிங்கம்

இறைவா... என் தலைவா...

உலகினிலே ஒரு தெய்வமே
எந்தன் தேவனே
என்றும் இறையருளே...
கண்கள் மூடியே
உன்னை காண்கிறேன்
சுகமாகிறேன் வழி தெரிகிறதே...

பிறப்பினில் உந்தன்
சிறப்பினை பாட
வல்லமைகள் என்றும்
என்றும் அருள்வாய்
கருவினில் என்னை
தத்தெடுத்த தெய்வம்
உந்தன் வழி எந்தன் வாழ்வாகும்
கவிதையிலே நீ இருப்பாய்
காலங்களில் உயிர்த்தெழுவாய்
கல்வியா... செல்வமா...
யாவுமே... நீ தான்...

உலகினை படைத்தாய்
உயிரினை கொடுத்தாய்
உண்மைகளை அங்கும்
இங்கும் விதைத்தாய்...
கலைகளின் தெய்வம்
கருணையின் உருவம்
கண்ணெதிரில் இன்பம் தந்த
தலைவன்....
உருகி நின்றால் அருள் பொழிவாய்
மாயைகளை புரிய வைப்பாய்
உன்னிடம் கற்றது...
வாழ்வினை தந்தது...

த. நாகலிங்கம்


நீ தான் என் புதுமை.....

என்னுயிர் தேவி உன்னுயிர் நான் தான்
உன்னாலே நானும் இன்று வாழ்கிறேன்
நெஞ்சில் உன் ஆசையை
கண்ணில் நான் பார்க்கிறேன்
என் ஆயுள் உன்னோடு வாழுமே

காதல் நெஞ்சம் என்னிலே
கானம் ஒன்றை கேட்குதே
நீயே எந்தன் காதல் கானம்
நான் உன்னிலே...

உண்மை காதல் எந்நாளும்
உயிரில் இறக்கும் ....
காதல் காமம் என்று சொன்னால்
அதையும் உடைக்கும்
நீ தான் என் இனிமை....

வாழ்க்கை என்னும் தீவையே
நாமும் கண்டு வாழலாம்
நீயும் நானும் ஓன்று சேர்ந்து
தீவை வளர்க்கலாம்
உந்தன் கனவில் எந்தன்
கண்கள் ஒன்றாய் சேரும்
உயிர்கள் ரெண்டும் சேரும் போது
உறவே சிறக்கும்
நீ தான் என் புதுமை.....

த. நாகலிங்கம்

தொடங்கும் கருவறை.... முடியும் கல்லறை.

கருவறையிலே தொடங்கும் போராட்டம்
ஒரு துளியில் ஆயிரம் உயிர்களை தள்ளி
ஒரு  உயிர் வளரும்... கருவறையில்
தொடரும் போராட்டம் மண்ணில் இன்று
புகழுக்காக போராட்டம்
வெற்றிக்காக போராட்டம்
பணத்துக்காக போராட்டம்
போராட்டம் என்னும் போர்வை
உறவுகளையும் பாசங்களையும்
போர்த்தி கொண்டது
போராட்டமே வாழ்க்கையாகி போனது
வாழ்க்கையே போர்க்களம் தான்
தொடங்கும் கருவறை....
முடியும் கல்லறை.


த. நாகலிங்கம்

உயிரை பறித்தானே...

ஊற்றெடுத்த ஆசையில்
ஊன்றிவிட்ட என்னுயிரே
உன்னை அடைய வளம் வந்தேன்
உலகை... எவனோ ஒருவன்
உலகும் நீயும் ஓன்று தான்
உலகை வலம் வந்தாலென்ன
உன்னை வலம் வந்தாலென்னவென்று
உன்னை சுற்றி என்ன கண்ணை கட்டி
உன் உடலை அடைந்தானே- என் 
உயிரை பறித்தானே...


த. நாகலிங்கம்

காதலின் தீபம் ஓன்று...

கண்களில் பாசம் கண்டேன்
காதல் தானே என் நெஞ்சில்
ஒரு முறை பார்த்த போதே
என்னையே நானும் தந்தேன்
வானம் தந்த தேவி நீயே

உலகமே உன்னை கண்டால்
ஒளி மயமாக கூடும்
வானவில் வண்ணம் கூட
உன்னிலே தோல்வி காணும்
பூமியில் நீயும் வந்தாய்
பூமியில் நீயும் வந்தாய்
புண்ணியம் ஆகுமே
வைரத்தை உன்னில் கண்டேன்
கண்களாய் மின்னுதே
கொல்வாய் கொல்வாய் பெண்ணே

என்னிலே உன்னை பார்த்தேன்
உன்னிலே நானும் எங்கே
செந்தமிழ் வார்த்தை என்றால்
காதலே என்று சொல்வேன்
வாசங்கள் பூவில் இல்லை
வாசங்கள் பூவில் இல்லை
உன்னிடம் உள்ளதே
தூக்கத்தை வாங்கி சென்றாய்
ராவுகள் நீளுதே
தாராய் தாராய்  உன்னை. 

த. நாகலிங்கம்

நீ தானே என்னோவியம்...

உயிரானேன்... உனதானேன் ...
உன்கனவில் நான் வருவேன்
என் இதயம் அதை தருவேன்

என் கண்கள் என்றும் உன் பிம்பம் தானே
உயிராக வந்தென்னில் உயிரெடுத்தாய்
காற்றாக வந்தாய் எனை கொண்டு சென்றாய்
இப்போதே என் நெஞ்சம் கரையுதடி
வானவில் கொண்டு ஆடை ஓன்று தைத்தேன்
உனக்காக காத்திருப்பேன்...

ஒரு வானம் தானே உலகெங்கும் காக்கும்
உன் வானம் தானே நீ அறிவாய்
கடலோடு கரைந்தால் உப்பாக கூடும்
உன்னோடு கரைந்தேனே இனிப்பானதே
ஓவியம் கூட உன்னை கண்டால் நாணும்
நீ தானே என்னோவியம்...

த. நாகலிங்கம்


பிரிவென்பது புது ஆரம்பம்... நட்போடு தான் நாம் வாழுவோம்..

மனமே ஒ மனமே நீ கலங்காதிரு
பிரிவை உன் வாழ்வில் நீ கலக்காதிரு
பிரிவென்பது புது ஆரம்பம்
நட்போடு தான் நாம் வாழுவோம்

கல்லூரி நாட்கள் வாடாத பூக்கள்
உளமாற பாட இனிதான பாக்கள்
உன் சொந்தம் தானே முடியாது மனமே
புது வாழ்வின் பூக்கள் மலராகும் தினமே
தினந்தோறும் வந்து திருநாளை போன்று
குதியாட்டம் போட்ட கல்லூரி ஆண்டு
பிரியாது நட்பென்னும் பூமாலையே
பிரிவென்பது புது ஆரம்பம்
நட்போடு தான் நாம் வாழுவோம்

நண்பர்கள் எல்லாம் நட்போடு தானே
வாழ்ந்தாக  வேண்டும் என்னாளும் தானே
கல்லூரி வாழ்க்கை இறக்கின்ற வரைக்கும்
நினைவாலே கொஞ்சம் மகிழ்ந்தாடும் நெஞ்சம்
பிரிகின்ற நாளில் கணமாகும் இதயம்
அன்பாலே ஏங்கும்  இனிதான உதயம்
இது தானே அழியாத புது காவியம்
பிரிவென்பது புது ஆரம்பம்
நட்போடு தான் நாம் வாழுவோம்..



த. நாகலிங்கம்


உள்ளம் தறிகெட்டு அலையுதே .....

உள்ளம் தறிகெட்டு அலையுதே
மல்லுக்கட்டி மருகுதே
மாற்றங்களில் துடிக்கிறதே
கன்னம் செவக்க செவக்க
நெஞ்சம் துடிக்க துடிக்க
வெள்ளை முத்தகளை கேட்கிறதே

இன்பங்களை அள்ளி கொள்ள நானும்
வான தேவலோகம் சென்று வந்தேன் பாரும்
சின்ன சின்ன கண்களிலே வானவில்லை தாரும்
நெஞ்சம் படக்க படக்க
உள்ளம் தெறிக்க தெறிக்க
ஆசை கொதிக்கும் கொதிக்கும் அல்லவா
கண்கள் மினுக்க மினுக்க அதில் உனக்கும்
எனக்கும் பெரும் உறவு வந்ததல்லவா

கட்டிலிலே இன்பங்களை அல்ல
நானும் கொண்டு வந்தேன்
மன்மதனின் ராகம்
நீயும் வந்து இளமையின்
இன்பமது தாரும்
உள்ளம் கிறங்க கிறங்க
கண்கள் சொருக சொருக
காம வித்தைகளை அள்ளி தருவாய்
அதில் உனக்கும் எனக்கும் வரும்
இணக்கம் இணக்கம் அதை உடைக்க
யாரும் வருவா...

த. நாகலிங்கம்

Saturday, October 22, 2011

வழியாதோ உன் காதல் ...

நீயாக நானிருந்தால்
நெஞ்சமெல்லாம் இதம் பரவும்
நானாக நீயிருந்தால்
காவியமே கதை படிக்கும்

சிறுமுகையே நறுமுகையே
சிந்தாத தேனமுதே
காலங்கள் நம்மால் இன்று
காணாதோ மழலை ரெண்டு

அழகோடு உன்னை படைத்து
என் நெஞ்சை பணயம் வைத்து
உருவான காதல் இதுவோ
உலகாளும் தேடல் அதுவோ

மலை  போன்ற நெஞ்சத்தை
வெடி வைத்து தகர்த்தாயே
உடையாத எந்தன் நெஞ்சம்
உன்னாலே உருகுதடி

கலையோடு ஒன்றாகி
இளமைகளின் திடலுமாகி
விளையாடும் காதல் இதுவோ
உலகாளும் தேடல் அதுவோ

வண்டுரிஞ்சும்  தேனாக
குடித்தாயே  எந்தன் உயிரை 
தேனோடு நானும்  களிக்க
வழியாதோ  உன் காதல்



த. நாகலிங்கம்

மக்கள் மனங்கள் மாற்றம் காணுமோ ...

உலக வாழ்க்கை தானே
நிலையில்லாமல் போகும்
மக்கள் மனங்கள் மாற்றம் காணுமோ
உண்மை நிலையை அறிய கூடுமோ
பிறக்கும் போதும் எதுவுமில்லை
இறக்கும் போதும் எதுவுமில்லை
மக்கள் மனங்கள் மாற்றம் காணுமோ
உண்மை நிலையை அறிய கூடுமோ

மனித நேய வார்த்தைகள் இன்று
மறைந்து போக காரணம் எதுவோ
மதங்கள் பிடித்த மனித நெஞ்சமோ
வள்ளல் வாழ்ந்த பூமி இன்று
வெடித்து சிதற காரணம் எதுவோ
சாதி பித்து அரக்கன் நெஞ்சமோ
இறைவன் படைத்த உலகம் இன்று
பேய்கள் பிடியில் என்றால்
இறைவன் எங்கே தூங்க சென்றார்
அறிவோர் யாரும் உண்டா
கயவர் கையில் உலகம் என்பதால்
யார் தான் மீட்பதோ....


த. நாகலிங்கம்

உன்னால் முடியும்... தம்பி... தம்பி...

உன்னாலே முடியாதோ என்னாலே முடியாதோ
ஒன்றாக நாமும் சேர்ந்தால் எல்லாம் முடியாதோ
கையுண்டு காலுண்டு உனக்கான அறிவுண்டு
நேர்மைக்கு வாழ்க்கை பட்டால் வெற்றி நமக்குண்டு
உலகுக்கு இளைஞர் கூட்டம்
வலிமைக்கு வழிகள் காட்டும்
உனக்கான தேகம் மட்டும்
உரிமைக்கு வளமை மீட்டும்

எதனாலே பூமி வந்து நாமமும் பிறந்தோம்
ஜென்மங்கள் நூறு வேண்டி தெய்வம் தொழுதோம்
உன் கையில் மட்டும் தானே உந்தன் செல்வங்கள்
உசுராகி உலகமெல்லாம் உன்னை பரப்பும்
உனக்காக வாழாமல் நீ ஊருக்காக வாழ்ந்து வந்தால்
உன் பின்னே மக்கள் கூட்டம் வாழ்த்து கொடுக்கும்
நாட்டுக்கு நல்ல பனி திட்டங்களை ஏந்தி கொண்டு
சேவைக்கு உன்னை தந்து வாசம் பரப்பு
என்ன கொண்டு வந்தோம்
என்ன கொண்டு செல்வோம்
கைகளோடு கைகள் கோர்த்து ஒன்றாக வாழ்வோம்

முன்னோர்கள் கற்று தந்த வாழ்க்கை நமக்கு
முக்காலம் சென்றாலுமே வாழ்த்து கொடுக்கும்
பெட்டிக்குள் தூங்க செல்லும் செல்வம் நமக்கு
பாதாளம் பாயும் என்னும் பொய்கள் எதற்கு
ஏழையின் கண்ணீரையும் செந்நீரோடு ஓடச் செய்து
குளிர்காயும் ஆளுங்கூட்டம் வேரை பிடுங்கு
உன்னாலே முடியாதது ஒன்றுமில்லை என்று நம்பு
திடமான நெஞ்சத்தினுள் எல்லாம் துரும்பு
துன்பங்களை வென்று இம்சைகளை கொன்று
இன்பமென்னும் நாட்டுக்குள்ளே ஒன்றாக வாழ்வோம்



த. நாகலிங்கம்

Friday, October 21, 2011

கடவுள் பாதி.. மிருகம் பாதி....

ஆசைக்கு அசையாதவர்
கடவுள்...
இசைக்கு இசையாதவர்
மிருகம்...
இசை மேல் ஆசை
வைத்திருப்பவர்
மனிதன்...

த. நாகலிங்கம்


அழிக்க முடியாதவள்...

பெண்ணே...
கண்ணாகிய பேனாவால்
மூளை காகித்தில்
வரைந்து விட்டேன் உன்னை
யாராலும் அழிக்க
முடியாத நினைவு
மை கொண்டு...! 


த. நாகலிங்கம் 


நான் இந்தியன்... வல்லரசாகுமா இந்தியா?

பொங்கி எழுவேன்
வீட்டுக்குள்ளே...
மங்கி விடுவேன்
நாட்டுக்குள்ளே....
நல்லதை செய்வேன்
வீட்டுக்குள்ளே...
கெட்டதை செய்வேன்
நாட்டுக்குள்ளே...
பாசம் காட்டுவேன்
வீட்டுக்குள்ளே...
வேஷம் போடுவேன்
நாட்டுக்குள்ளே...
வீர வசனம் பேசுவேன்
வீட்டுக்குள்ளே...
கோழையாய் இருப்பேன்
நாட்டுக்குள்ளே...
கொஞ்சி குலவுவேன்
வீட்டுக்குள்ளே...
நெஞ்சை பிடுங்குவேன்
நாட்டுக்குள்ளே...
நான் இந்தியன்...
வல்லரசாகுமா இந்தியா?


த. நாகலிங்கம் 



அது காவியமாய்... இது ஓவியமாய்...

எழுதாத பல காதல்
மண்ணோடு மக்கியது
காவியமாய்...
எழுதிய என் காதல்
என்னோடு மக்கியது
ஓவியமாய்...

த. நாகலிங்கம் 


உழைத்து முன்னேறு ...

கடினமாக உழைத்தால்
முன்னேறலாம்... 
இப்படித்தான் பணம்
சேர்க்க வேண்டும் இது
லட்சிய வாழ்க்கை..
எப்படியும் பணம் சேர்க்கலாம்
இது வேசி தன வாழ்க்கை
நேர்மையால் முன்னேறினால்
நிலையான வெற்றி .....
ஏமாற்றி முன்னேறினால்
பலமான அடி...
எதிர்காலத்தில் !

த. நாகலிங்கம் 

Monday, October 17, 2011

வாருங்கள் உலகை காப்போம்...

வெப்பமாகும் உலகத்தை
குளிர்ச்சியூட்ட வாருங்கள்
விந்தையான அறிவியலை
அளவோடு ஆளுங்கள்
பனி பகுதி உருகி நாளும்
கடல் மட்டம் உயருது
புல் பூண்டு அத்தனையும்
கருகி கருகி சாகுது
காலநிலை மாற்றம்கண்டு
கண்டபடி ஓடுது
பருவ மழை பெய்யாமல்
பயிர்கள் எல்லாம் வாடுது..
குளுற்சியூட்டும் சாதனங்கள்
ஒசோனை ஓட்டை போடுது
புற ஊதா கதிர்களெல்லாம்
பூமியை நேராய் தாக்குது
வெப்பம் தங்கி
வெப்பம் தங்கி
உலகம் சூடாகுது
அளவுக்கதிக வாகனகள்
கக்குகின்ற புகைகளால்
அசுத்தம் பெற்ற காற்றெல்லாம்
சுத்தி சுத்தி பறக்குது
நமக்கான உபகரணங்களை
அளவோடு ஆளுங்கள்
வீடுகளில் மரம் நட்டு வளர்த்து
நீங்கள் பாருங்கள்
மின்சாரத்தை தினந்தோறும்
தேவையோடு ஆளுங்கள்
மிதிவண்டி பயன்படுத்தி
ஆரோக்கியமாக வாழுங்கள்..
ஆபத்தில் இருக்கும் உலகத்தை
நாம் தானே காக்கணும் வரும்
சந்ததிகள் நம்மை எப்போதும்
போற்றனும்....
வெப்பமாகும் உலகத்தை
குளிர்ச்சியூட்ட வாருங்கள்
விந்தையான அறிவியலை
அளவோடு ஆளுங்கள்

த. நாகலிங்கம்






தாய்..

உறங்காமல் உறங்கி
உனக்காக உருகி
உள்ளத்தை வழங்கி
உயிரையே கொடுத்து
உன்னத அன்பை
உன்னுடன் பகிர்ந்து
உள்ளதை அப்படியே
உலகுக்கு காட்டும்
காலக் கண்ணாடி தாய்..

த. நாகலிங்கம்

தொடர்கிறது குழப்பம்....

திசை மாறுகிறது வாழ்க்கை
தினந்தோறும்....
காற்று வீசும் எதிர் திசைக்கு
பறந்தோடுகிறேன்...
வெளிச்சம் குருடாக்கியது
விண்ணை தொட
விண்கலம் செய்
அறிவுரை காதை
செவிடாக்கியது...
யாரை நம்பி என்ன செய்வேன்
செல்லரித்த மனதை
செம்மையாக்க...
வழி தேடி வழி தேடி
தொலைந்து போவதா?
வணக்கம் போட்டு
வணக்கம் போட்டு
வளைந்து போவதா?
தொடர்கிறது குழப்பம்....


த. நாகலிங்கம்

ஒரு நாள் ஒருவரிடம்...

எத்தனையோ களங்கம்
வந்தாலும் காதல்
வாழ்ந்து கொண்டு தான்
இருக்கும்.. நீ உயிரோடு
இருக்கும் வரை
என் அன்பே....
உண்மை காதலுக்கு
நீ தான் அடித்தளம்..
ஒரு நாள் ஒருவரிடம்...

த. நாகலிங்கம்

திருடி...

நவீனமாக திருடும்
கலையை எங்கே
கற்றாயடி?
கண்ணாலே இதயத்தை
களவாடியவளே
திருப்பி கொடுத்துவிடு
இதயத்தை அல்ல
என் புன்னகையை...

த. நாகலிங்கம்



பெண்ணும் நிலவும்...

தொலைவில் இருந்து
பார்த்து உன்னை அழகி
என்கிறான் கவிஞன்
ஆக்சிஜன் இல்லாமல்
நெருங்கினால்
ஆறடி நிலம் தான்
அவனுக்கு எங்கே
தெரிய போகிறது பெண்ணும்
நிலவும் ஒரே இனம் என்று..



த. நாகலிங்கம்

நீ இல்லாத வாழ்க்கையில்

இறக்கும் நாள் தெரிந்தும்
நிம்மதி கொள்கிறேன்
இருக்கும் நாளை
எண்ணிக்கொண்டு...
நீ இல்லாத வாழ்க்கையில்
உயிர் மட்டும் என்ன
உறவு கொண்டாடுவது?

த. நாகலிங்கம்


அவசரத்தை கற்று தந்தவளே..

முட்டைகளில் இருக்கும்
கோழிகளை எண்ணுகிறேன்
பொரிக்கும் முன்னே
எல்லாம் நீ கற்று தந்த
பாடம் தானடி...

த. நாகலிங்கம்


காதல் நேரம்...

இமைக்கின்ற நேரம்
நீ தெரிவதில்லை
என்று நான் இமைக்காமலே
இருந்துவிட்டேன்...
கல்லறையில் காத்திருக்கிறேன்..
உனக்காக....

த. நாகலிங்கம்

காணாமல் போனேனே....

திரும்பி பார்த்தாய்
திருடு போனேன் நான்
உலகத்தை விட்டு தான்.. 

 

த. நாகலிங்கம்

 

மௌனத்தை கலைப்பாயா...

அகதியாய் அலைகிறேன்
சகதியாய் திரிகிறேன்
உன் மௌனத்தை
கலைக்க... 

த. நாகலிங்கம்

 

Sunday, October 16, 2011

லஞ்சம்

எங்கும் புகுந்து விட்ட 
பூதமே...
நல்லவேளை காதலுக்குள்
மட்டும் நீ இல்லை! 

த. நாகலிங்கம்



உயிரே...

ஏய்... உயிர் மூச்சே
உன்னை தொலைவில்
இருந்து பார்கிறேன்
ஒளிர்கிறாய்....
அருகில் வந்தவுடன்
எங்கே நீ?..
உணர முடியவில்லையே!
ஓ நீயும் கானல் நீர்
பரம்பரையோ?

த. நாகலிங்கம்

முடவன் v/sகொம்பு தேன்

முடவன் கொம்பு தேனுக்கு
ஆசைப்பட்டான்...
கிடைத்ததோ கொம்பு தான்...
ஓ... அது தான் அவனுக்கு
நடக்க உதவும் தேனோ!

த. நாகலிங்கம்


காதல் ரோஜாவே...

ரோஜாவே... உன்
வெள்ளையழகில் மயங்கி
இதழ் உரச வரும்போது
உன் கொடிய முள் குத்தி
நீ சிவப்பானாய்..
என் இதழ்கள் ரணமானது
பரவாயில்லை.... நீ
காதல் ரோஜாவானாய்
இந்த சந்தோசம் போதும்!

த. நாகலிங்கம்

முதிர் கன்னி...

என் இளமையும் அழகும்
கர்வம் தந்தது
உலகில் தான் தான் என்னும்
அழிவை தந்தது
எனக்குள் ஒருவனை
கற்பனை செய்தேன் 
என் கற்பனைக்கு ஏற்ற 
ஆண் மகன் பூமியில்
எங்கும் இல்லை...
யாருக்கும் கிட்டாத 
கணவன் எனக்கு 
வேண்டுமென்றேன்
உனக்கு இங்கில்லை யாரும்
வானில் இருந்து தான்
குதித்து வருவான் என்றாள்
என் பாட்டி ..
என் ஆசை நிறைவேறுவதில்
தாமதமோ....
நான் வானை நோக்கி 
காத்து கொண்டிருக்கும் 
முதிர் கன்னி...    

த. நாகலிங்கம்

      

உன்னை மட்டும் தான்...

கண்கள் நேசிக்கும்
பலரை....
இதயம் தாங்கும்
சிலரை....
மூளை நினைத்து
கொண்டிருக்கும்
உன்னை மட்டும் தான்..

த. நாகலிங்கம்


Saturday, October 15, 2011

எங்கே எனது கவிதை...

எழுத வேண்டும்
என்று நினைப்பேன்
உன்னை....
காகிதம் மலர்ந்து
மனம் வீசும்,,,
நினைக்கும் போதே
இப்படி என்றால்....
எழுதினால்?...
தேடுகிறேன் உன்னை.. 

த. நாகலிங்கம்

 

ஆண் விடுதலை...

வேண்டும் விடுதலை
பெண்ணாதிக்கம் ஒழிக..
ஆண்களை அடிமை
படுத்தும் அரக்க குண
பெண்கள் ஒழிக...
வீட்டுக்குள்ளே ஆணை
பூட்டி வைக்கும்
அடிமையை அடியோடு
ஒழிப்போம்........
ஆதாம் டீசிங் செய்யும்
பெண்களை சிறையில்
தள்ளுவோம்....
இது தேவையா?
விழித்து கொள்வோம் ஆண்களே
கொஞ்சி கொஞ்சி பேசி
நெஞ்சிக்குள்ளே பூட்டுவோம்.
குறிவைத்து தாக்கி
பொறி வைத்து பிடிப்போம்
நம் உள்ளத்திலே வளர்ப்போம்
உயிருக்குள் கலப்போம்..
தந்திரம் செய்து
எந்திரம் ஆக்குவோம்..
ஆணும் பெண்ணும் சமம்
என்னும் எழுத்தினை பொறிப்போம்..
உலகத்தை வளர்ப்போம்
பெண்களை மதிப்போம்..

த. நாகலிங்கம்

பதினெட்டு வயசு...

திகட்டாத காதல்
திருந்தாத நெஞ்சம்
திமிரான மனசு
திசைமாறும் பயணம்
தினுசான பேச்சு
திரும்பாத பார்வை
திடமான நம்பிக்கை
இளமையின் அறிகுறி....

த. நாகலிங்கம்



காதல் நோய்...

வாய் விட்டு சிரித்தால்
நோய் விட்டு போகுமாம்!
நானும் சிரித்தேன்
நோய் தான் வந்தது
காதல் நோயாம்..

த. நாகலிங்கம்

சொல்றத கேளேன் .....

பேசுவதை நிறுத்தினாள்
உளறிகொண்டிருக்கிறேன்.
நண்பர்களிடம்....

தட்டி கேள்.....

உலகம் கெடுவது
கெட்டவர்களால் அல்ல
வேடிக்கை பார்க்கும்
நல்லவர்களால் தான்...

த. நாகலிங்கம்

அகரம் இப்போ தகரம் ஆச்சி..

மாடு மேய்க்கிறேன்
அகரம் தெரியாமல்
தகர டப்பாவில்
தண்ணீர்... சிறுவன்!

த. நாகலிங்கம்


அடிமை...

ரத்த தானம் செய்ய ஆசை தான்
உறிஞ்சிகிறார்...முதலாளி!
 

த. நாகலிங்கம்

எங்கே செல்கிறோம்?

சுற்றி திரியும் சிறுவர்கள்
கையேந்தி பசி போக்க
கவர்னர் மாளிகையில்
விருந்தோம்பல்....
வறுமை ஒழிப்பு தினமாம்!


த. நாகலிங்கம்

நான் படும் பாடு ....

இதயத்தில் வாழ்கிறாய்
சுய நினைவின்றி நான்
நரகத்தில்!




த. நாகலிங்கம்

யாரடி நீ....?

எனக்காக பிறந்தவள் நீ
எண்ணிகொண்டிருந்தேன்
என்னை காக்க ஆள் இன்றி
எரிந்து கொண்டிருக்கிறேன்
நெய் விட்டு சென்றுவிட்டாய்...



த. நாகலிங்கம்

Friday, October 14, 2011

கதை... கவிதை... காதல்...

காதலி புலம்பல்
*************
உன்னை தொலைத்து விட்டேன்
என் சுயநலம் தான்
இன்று தேடுகிறேன்
என் சுய உணர்வில்
வந்து விடு என்னை அடைந்து விடு
என் உயிரை கிழிக்காதே
என் பிரிவை மறக்காதே

காதலன் புலம்பல்
***************
தேவதாஸ் ஆகாமல்
தேவதை தேடுகிறேன்
தேடிய சொந்தமத்தில்
தேடாமல் வந்தவள் தான்
தேரில் சென்று விட்டாள்
அது உண்மை தேரா தெரியவில்லை!

காதலியின் விபரீத ஆசை
*********************
உள்ளம் பார்க்காமல்
உன்னை மறந்து விட்டேன்
உண்மை விளங்கிடவே
உன்னை தேடுகின்றேன்
நீ எங்கு சென்றாயோ?
என்னை மறந்தாயோ
நீ திருமணம் செய்துவிட்டாலும்
என்னை மறுமணம் செய்து விடு

காதலனின் சூரிய நமஸ்காரம்
************************
யாரும் கிடைக்கவில்லை
ஊர் பொய் சேர கூட
காசு இல்லை....
பணம் தான் காதலுக்கு
பாலம் என்றுணர்ந்தேன்
பாலம் இடிந்தாலும்
பலம் என்னை அகலவில்லை
உழைத்தே சேர்த்திடுவேன்
கரத்தை பிடித்திடுவேன்

காதலியின் மன மாற்றம்
*******************
வாழ்ந்தால் உன்னோடு
இறந்தால் என்னோடு
சீக்கிரம் வந்து விடு
என் ஆயுள் வளர்த்துவிடு
பணத்தை காட்டி என்னை
பணிய வைத்தவனை
கொலையும் செய்துவிட்டேன்
அவன் தீயவன் என்ற பின்னே
உன்னை புரிந்து கொண்டேன்
உள்ளம் வருத்தி கொண்டேன்

காதலன் முடிவு
*************
வேலை தேடிக்கொண்டேன்
இனி கவலை எனக்கில்லை
உழைத்தே சேர்த்த பணம்
மலையாய் குவிந்திருக்கு
இனி நான் தான் ராஜாவாம்
இந்த உலகம் என் கையில்
தப்பை செய்திருப்பேன்
அந்த திருமணம் நடந்திருந்தால்
என் அறிவை வளர்த்து கொண்டேன்
அவள் நடத்தை கெட்டவளே

காதலியின் ஏமாற்றம்
*****************
உன் தோற்றம் கண்டு தான்
உன்னை காதலிக்க
தொடங்கினேன்... நம் திருமணம்
போது தான், நீ ஏழை
என்றுணர்ந்தேன்....
அன்று இரவே உன் பண நண்பன்
ஆசை காட்டி என்னை
அபகரித்து சென்றுவிட்டான்
பெரிய தவறு செய்தேன்
நம்பிக்கை துரோகம் இழைத்தேன்
காலம் பல கடந்தும்
உனக்காய் காத்திருப்பேன்..

காதலனின் முடிவு
***************
ஊருக்குள் சென்றிடுவேன்
உடமையை எடுத்து கொண்டு
தோற்றம் கண்டு எல்லாம்
என்னை தோளில் தூக்கி கொள்வர்
அவள் முகத்தை பார்க்காமல்
மீண்டும் திரும்பிடுவேன்

காதலனுக்கு புது காதலி
********************
"என்னே அழகோவியம்
இவள் போல் பார்த்ததில்லை
மணந்தால் இவள் தானே
இல்லையேல் வேண்டாம்
திருமணமே....

காதலனின் காதல் கவிதை
*********************
நான் காதல் செய்தேன்
முன்பு பணப் பேயை
இன்று அவளது நினைவு நாள்
அவள் என் உணர்விலிருந்து
இறந்து பத்து ஆண்டுகள் நிறைவு
உன்னை கண்ட நான் மீண்டும்
இழந்தேன் என்னை....
விரும்பினால் திருமணம்
இல்லையேல் வாழ்வே வனம்
பதில் கூறு என்னன்பே !

புது காதலியின் பதில்
*****************
உங்கள் புது கவிதை
எனக்குள் புது விதை
யாரும் இது போலே
உண்மையை எழுதவில்லை
உந்தன் வெளிப்படையும்
எனக்கும் பிடித்திருக்கு
என் செய்வேன் , விதியும்
விளையாடுது...
இரண்டு வருடத்திற்கு முன்
என்னை கரம் பிடித்த
உத்தமன் உயிர் விட்டான்
நானோ இளம் விதவை
எனக்கோ சொந்தம் இல்லை
என்னை மறந்திருடுங்கள்
புது பெண்ணை மனந்திடுங்கள்
உங்கள் நல் மனதை புரிந்தவள்
கிடைத்திடவே நானும் வேண்டி
கொள்வேன்... உன்னை தாண்டி
செல்வேன்..........!

காதலனின் பதில்
**************
நீ தான் என் மனைவி
வாழ்வின் ஒரே துணைவி
உன்னை மணந்திடவே
விருப்பம் பெருகியதே
கெட்டி மேளம் கொட்டிடவே
சம்மதம் சொல்லிவிடு
முன்னாள் காதலியில்
மனதை பொருத்திடவே
உன் மனம் பெரிதாகும்
மணவறை வந்துவிடு....

புது காதலியின் மறுப்பு
*******************
என் உள்ளம் ஒருபோதும்
வேற்றோரை நினைத்ததில்லை
அவர் தான் என் முதலும்
இது தான் என் முடிவும்
என் கண்ணை என்னாலே
ரணம் செய்ய இயலாது
மறந்தென்னை விலகிவிடு!
மீண்டும் பிறந்தாலும்
அவரே என் கணவர்
கட்டாயம் செய்யாதீர்
என்னை பணிக்காதீர்

காதலன் கொடுத்த அவகாசம்
************************
உன் இளமை ஒருபோதும்
துணையாய் இருக்காது
மாறாய் அது தானே
உன்னை பாடாய் படுத்திவிடும்
உன்னை கரம் பிடிக்க
நானும் காத்திருப்பேன்
பிறந்த ஊர் சென்று வர
மாதம் இரண்டாகும்
அதுக்குள் உன் மனதை
எனக்காய் மாற்றிவிடு
உன்னை கரம் பிடிப்பேன்
இதயத்தில் வாழவைப்பேன்.

(படித்த புது காதலி மௌனம் சாதித்தல்)
காதலனின் சொந்த ஊரில்
*********************
என் வீடே காணவில்லை
தாய் தந்தை யாருமில்லை
என் பிரிவும் தாங்காமல்
விண்ணுலகம் சென்றார்களோ
அனைத்திற்கும் காரணம்
அவள் தானே... அவளே எமனாவாள்
இனியும் ஒரு போதும்
இங்கே வாழ வேண்டாம்
கிளம்ப நினைக்கையில்
பழைய காதலி வருகிறாள்
அவனும் பார்க்கிறான்

காதலி தடுத்தல்
*************
என் அன்பே போகாதே
ஆருயிரே விலகாதே
உண்மை என்னவென்று
முழுதும் அறிந்து கொண்டேன்
உன்னை இனி பிரிந்தால்
உயிர் போகும் பரலோகம்
நீ தானே என் வாழ்வு
இன்றேல் என் சாவு

காதலனின் பெருங்கோபம்
**********************
ச்சீ... போடி தெரு நாயே
உன் வார்த்தை வெறும் வாயே
உன்னை பார்த்தாலே
உலகம் உதறி தள்ளும்
என் உள்ளம் உனக்கில்லை
முகத்தில் விழிக்காதே
உன் கேவல புத்தியினால்
என் உண்மையை இழந்துவிட்டாய்
இனி உடைந்தது ஒட்டாது
என் அந்தஸ்த்து உனக்கெட்டாது

பழைய காதலி அழுதல்
********************
என் அன்பே என் தலைவா
பெரிய தவறிழைத்தேன்
உன் மேல் களங்கமில்லை
நானே அதுவானேன்
மன்னித்து மறந்து விடு
அதுவே என் புண்ணியம்
என்னை மறுத்தாலும்
உன் கருணையே என் விருப்பம்
என்னை மன்னித்து விடு
(அழுதல்)

காதலனின் உச்ச கோபம்
*********************
மன்னிக்க நான் என்றும்
கடவுள் ஆனதில்லை
உன் இழிந்த இச் செயலும்
கடவுளே மன்னிக்காதது.
உன் உயிரை வைத்து கொண்டு
இன்னும் வாழலாமோ
மானம் கெட்டவளே
மடிந்து போய் விடு
நீ பெண்ணல்ல...
அந்த இனத்தையே கெடுக்க
வந்த பேயாவாய்...

(காதலி கதறிக்கொண்டு ஓடி விடல்)

காதலன் புது காதலியை தேடிக்கொண்டு
அவள் இருக்கும் இடம் செல்கிறான்

காதலன் புது காதலியை தேடுதல்
***************************
எங்கே காணவில்லை
என் மனதை மயக்கியவள்
தேவதை முகம்தனை
காண துடிக்கிறதே என் மனம்
எங்கே சென்றுவிட்டாள்
மனம் தானலைகிறதே !

காதலனின் ஏமாற்றம்
*****************
புது காதலி உயிர் நீத்தாள்
செய்தி விழுந்திடவே சுடும்
மண்ணிலிட்ட புழுவானான்
நெருப்பிலிட்ட உடலானான்
என் என்னை பிரிந்தாளோ!
தவறு செய்தேனோ ?
நன்றாக இருந்தவளை
காய படுத்தி கொன்று விட்டேன்
நானே கள்வன்... நானே தீயவன்

புது காதலியின் கடிதம்
******************
கிடைக்க பெறல்
*************
அழுது வீடு சென்றான்
புது கடிதம் கிடைக்க
பெற்றான், அதிலே
படித்தவற்றை அவனே
எரித்து விட்டான்
"இது தான் உலகமடா
இனிமை இல்லையடா
பணம் தான் பிரதானம்
என்றேன் நான் தினம்
மனம் தான் இவ்வுலகின்
மகத்துவம் என்றுணர்ந்தேன் "
கடிதம் படித்தவற்றை
நமக்காய் சொல்கின்றான்

புது காதலியின் கடிதத்தில்
*********************
என் இளமை வதைக்கிறது
என் மனமே தடுமாறுகிறது
என் அன்பான தெய்வத்துக்கு
தீங்கிழைக்க விரும்பவில்லை
இந்த கடிதம் படிக்கும் போது
நான் விண்ணுலகம் சென்றிருப்பேன்
ஒரு உண்மையை புரிய வைத்தீர்
இளமையுடன் ஒரு பெண் தனியே
வாழ முடியாது...
நான் செல்கிறேன்... என் கணவனை
அடைகிறேன்.................

சில மாதங்கள் கழித்து சொந்த ஊருக்கு
செல்லும் காதலன்...........


பழைய காதலியின் நிலை காணல்
***************************
எங்கு அவளென்று
தேடி பார்க்கையில்
ஒரு ஓலை வீட்டினுள்ளே
கிழிந்த உடையோடு
முடங்கி கிடக்கின்றாள்
அருகே சென்றவளை
விரல் நுனியால் தொடும் போது
துடித்து எழுகின்றாள்
வான் அதிர சிரிக்கின்றாள்
பெற்றோரை இழந்ததனால்
பைத்தியம் ஆனவளை
சொந்தமாக்க நினைக்கின்றான்
நன்மை செய்கின்றான்...

காதலியின் பைத்தியம் குணமாதல்
****************************
வைத்தியம் செய்து வைத்து
பைத்தியம் குணமாக்கி
கரம் சேர்கின்றான்....

விதியின் விளையாட்டு
*******************
அந்தோ பரிதாபம்
கனவன் (காதலன்) விபத்தில்
இறக்கின்றான்....
மனைவி (காதலி) தவிக்கின்றாள்
தானும் இறந்திடவே துடியாய்
துடிக்கின்றாள் .....
எழுந்து கிணத்தருகே
சென்று விழுகின்றாள்
தூக்கம் களைகின்றாள்.

கனவு தான்
*********
எல்லாம் கனவென்று
விழித்தே தெரிகின்றாள்
காதலனை காண ஓடோடி
வருகின்றாள்....
இரவை பொறுக்காமல்..
நடந்த கனவை எல்லாம்
எடுத்து உரைக்கின்றாள்
காதலன் சிரிக்கின்றான்
இது எந்த படமென்று
இரவு வேளையிலே...

காதலனின் உண்மை குணம்
***********************
காதலன் சேருகின்றான்
காமத்தில் விழுகின்றான்
காதலி கிடைத்தவுடன்
இரவும் இனிதாக...
எல்லாம் முடிந்த பின்னே
எழுந்தே சென்று விட்டான்
திரும்ப வரவில்லை....

காதலியின் உணர்வு
*****************
ஏமாற்றம் அடைந்தேனே
நிழலும், நிஜமும் வேறாகும்
அவன் உண்மை குணம்
புரிந்ததனால், தப்பி விட்டதாக
தானும் நினைத்து கொண்டாள்
இரவில் சென்றததனால்
பெரும் பாடம் கற்று விட்டாள்
அவன் கள்வன் என்று தானே !
நடந்தது நடந்தாலும்
இனி ஒழுக்கமே என் கடமை
இனிமேல் ஒரு போதும்
தவறே செய்ய மாட்டேன்..
அது நம்பிக்கையினால் செய்த
தவறாதலால் இனி அழுது
புலம்பி என்ன பயன்...என்று
தெளிவாய் முடிவெடுத்தாள்

(முடிந்தது)

த. நாகலிங்கம்

                  

 
           
 
         
     
     

Thursday, October 13, 2011

விதவை

பூ  வைத்தாள்
பொட்டு இட்டாள்
கணவன் படத்திற்கு!

கவிதை v/s குழந்தை

கருவறையில் வளரும்
கணவனின் கவிதை
குழந்தை!

பெண்களும் தான்...

தொட்டால் சுருங்கும்
தொட்டால்சுருங்கி
பெண்களும் தான்



த. நாகலிங்கம்

ஏன்?

ஐந்திலே 
வலையவில்லையாம்
ஐம்பதில் எதற்கு?

த. நாகலிங்கம்

என் சிரிப்பு...எங்கே ?

தொட்டில் பழக்கம்
சுடுகாடு மட்டுமாம்
எங்கே என் சிரிப்பு?

த. நாகலிங்கம்

பெண்ணாக பிறக்க என்ன தவம் செய்தாய்...

பெண்ணுக்கு ஏழு பருவம்
ஆணுக்கு அதிலோர் உருவம்
"பேதை" என்பவள் உச்ச
போதை ஏற்றி ஆணின் காதில்
இம்சைகள் பாடும் தேவதை வம்சம்
இளமையின் துவம்சம் 
(1 வயது முதல்  18வயது வரை)

"பெதும்பை" என்பவள் பதுமையானவள்
காவிய கவிதை கண்களில் பாய்ந்து
ஆணின் வாழ்வில் புதுமை தந்து
ஆயிரம் ஆண்டுகள் ஆயுளை
வளர்க்கும் அற்புத பருவம்
 (19 வயது முதல் 23  வயது வரை)

"மங்கை" தானே மடத்தினை காப்பாள்
ஆணின் உள்ளே ஆணவம் தடுப்பாள்
குடியை காக்க சூளுரை ஏற்பாள்
( 24 வயது  முதல் 30  வயது வரை )

"மடந்தை"யானவள் கடமையில்
களிப்பவள் கணவன் வாழ்வில்
கருணையை தருபவள்
கற்பை காத்து கலைகள் வளர்ப்பவள்
(31 வயது முதல் 35  வயது வரை)

"அரிவை" பருவம் அறுசுவை பருவம்
ஆணின் அன்பில் உழன்றிடும் பருவம்
இதயம் தொலைக்கும் இன்னொரு பருவம்
உறவை வளர்க்க துடித்திடும் பருவம்
(36  வயது முதல் 45  வயது வரை )

"தெரிவை" என்பவள் முற்றும் உணர்ந்தவள்
தெரிந்தால் தவறை உடனே தடுப்பவள்
வாழ்வின் உயர்வை எட்டி பிடிப்பவள்
வளமுடன் வாழ வழிகள் தருபவள்
(46 வயது முதல் 50  வயது வரை)

"பேரிளம்பெண்" பருவம் இன்னொரு குழந்தை
பருவம், அன்பிற்கு ஏங்கும் சிறுமையின்
உருவம், ஆலயம் காண துடித்திடும் பருவம்
பெண்கள் வாழ்வில் கடைசி பருவம்
இது தான் பூமி தெய்வத்தின் உருவம்
(51  முதல்....... ) 


த. நாகலிங்கம்

சுரண்டும் சூரர்கள்

திறமைகள்  தெரு நாய்களாய்
அலைகின்றன பரந்தவெளியில்
இருக்கின்றதை கிண்டாமல்
இல்லாததை தோண்டும் உலகம்
செவிக்குணவை வயிற்றுணவோடு
விற்போர் கூட்டம் தான் உலகில்
பயிரை மேய வந்த வித்தகர்கள்
வைரசாய் அரித்தெடுக்க
வழிவிடும் இந்நாட்டு மேதைகள்
செலவினங்கள் உழைப்புக்கு மேல்
உழைப்பினங்கள் வறுமைக்கு கீழ்
செல்லரித்த மலர்மொட்டு
மாலைக்குள் அலங்காரமாய் !
செல்லாத சஞ்சலங்கள்
ஏழ்மைக்கும் மேலாய்
உள்ளங்கை அரித்தாலும்
மருத்துவ செலவு தான் ஏழைக்கு ...


த. நாகலிங்கம்

யார் தவறு ?

கல்லுக்குள் ஈரம் என்று
பிழிந்தெடுத்தால் குருதி
கடமைகள் கல்விக்குள்
புகுந்து கிடக்கின்றன,
காரணம் இல்லாமல்!
விண்மீனை தோற்கடிக்க
செம்மீனை அலங்கரித்தால்
யார் தவறு?

ஓடும் நதியினில் ஓடம்
ஓலங்கள் நெஞ்சில்
ஓசையிடுகின்றது
அது திசைமாறுமா?
இளமைகள் கனவில்
முதுமைகள் புகழ் சேருமா?
நெஞ்சங்களில் தீ மூட்டம்
புகைகளில் மூழ்கும் மனங்கள்
மூச்சடைத்தால் யார் தவறு?

தெளிவடையா அறிவொளியின்
ஆக்கங்கள் ஆவல் தந்தால்
அறியாத பிள்ளை மனங்கள்
அழிந்த கோடுகளாய்,
அலைகழிக்க படுகின்றன!
விண்ணுக்கு யார் விறகு தந்தது?
எரிந்த சாம்பல்கள்
ஏழ்மையை ஏளனம் செய்கின்றன

போதும் குருத்தெலும்புகள்
முறிந்தது- அவை பெருத்து
பறைசாற்றட்டும் மகத்துவத்தை ...


த. நாகலிங்கம்

தமிழா... தமிழுக்குள் முடங்காதே..

விதைத்தது தான் அறுவடையாகும்
என்னுள் தமிழை விதைத்தவர்கள்
ஆங்கில அறுவடையில் தள்ளி விட்டார்கள்
தமிழ் வழியில் பயின்ற நான்
கல்லூரியில் ஆங்கில வழியில்
கண்ணை கட்டி காட்டில் விட்டாலும்
கண்ணை பிடுங்கவில்லை
காலங்கள் அலை கழித்தன
வெறுமைகள் வாட்டி எடுத்தன
கருணை கொலைக்கு கடிதம்
போட்டேன் கனவு காணுங்கள்
என்னும் பதில் வந்தது
நானும் கனவுக்குள் கபடி
ஆடினேன் மூச்சை பிடித்தது
 தான் மிச்சம்.......
முயற்சிகளில் சிக்கி
சின்ன பின்னமானேன்
வெளிச்ச மலர் மலர்ந்தது
தமிழுக்குள்  முடங்க வேண்டாம்
தமிழன்....
முழங்க வேண்டும் தமிழை
அரசில் ஆதாயம் தேடும்
கள்வர்கள் மத்தியில் தமிழுக்கு
வளர்ச்சி கிடைக்காது..
பிற மொழி படித்து
தமிழ் மொழி வளர்ப்போம் 

த. நாகலிங்கம்

 

 

 

 

கவிதை குழப்பம்...

துளிர்விடும் அலைகளானவன்
எளிதான காற்றாய் திரிபவன்
யாருக்காவும் கண்ணீர் சிந்தி
பொறுமை காக்க வேண்டாம்
வானவில்லை வளைத்து
கையில் பிடித்தபடி
சூறாவளி மலர்ந்த சமுத்திரம்
சமுத்திரம் பிளந்துருக்கிய பூ
உருவாக்கி இருக்கலாம் நீ
அல்லது கண்டும் காணாமலும்
இருக்கலாம்... நதி ஓட்டத்தில்
நீந்த தெரியாமல் சிக்கி
தவிக்கும் மெல்லிய பாறை நான்
இருண்மை என்பது வெளிச்சம்
வெளிச்சம் என்பது இருண்மை
என் திசை பிசகிவிட்டது
என் வாழ்க்கை
உயிரின் திறவுகோளாய் இன்பம்
தட்டுங்கள் மூடப்படு
மூடுங்கள் வழி விடும்
வேண்டாத வேளைகளில்
துளிர் விடாமலும் போகலாம்
குழந்தை உணராது பூமி வந்ததை
இறப்பு உணர்த்தாது வானம்
செல்வதை... இது போல் தான்
நட்பின் இடைவெளியும்
உணர்த்தாது உள்ளத்தின்
குமுறலை...



த. நாகலிங்கம்

Wednesday, October 12, 2011

மன்மத மனசு

தவிக்கும் இள மனங்கள்
தங்கும் இடம் எத்தனையோ
தளராத விந்தை மனம்
தத்தளிக்க செய்ததுவோ
இளவேனிற் காலமதில்
இமைக்காத சொந்தமத்தில்
இருளாலே வார்த்தை சொன்னேன்
இல்லாமல் இல்லை என்றாய்
அன்பான நீல தெய்வம்
ஆசை கணை விட்டுவிட்டான்
ஆருயிரே வந்து விடு
அடைந்து என்னில் இன்பம் கொடு
தேவாதி தேவனுக்கே இந்த
தேனான சொந்தமதில்
தேவாமிர்தம் என்றே இன்னும்
தேடாமல் விடவும் இல்லை
கண்ணாலே காட்டிவிட்டாய்
கரத்தாலே ஏற்றிவிட்டாய்
கல் மனதை வெம்மையாக்கி
காரம் என ஒதுங்கி விட்டாய்
தவறான உன் கணிப்பை
தயங்காமல் சொல்ல வந்தேன்
தணியாத இன்பமதில் இனிப்பே
தஞ்சம் அடைந்து கிடக்கு
ஆசை என்றும் நரைப்பதில்லை
மீசை இங்கு துளிர் விடவே
கால நேரம் வந்ததுவே
கலையாத என் கனவை
கருமையாக்கி செல்லாதே
சிற்றின்பம் பேரின்பம்
என்னவென்று அறிந்துவிட
துளிர்மனசு துடிக்கிறது
அது துடி துடித்து
வெடிக்கிறது
என்னான எந்தன் அன்பே
வந்து என்னில் புகுந்து விடு
முக்தி வரம் தந்து விடு
மன் மத மனசு...

த. நாகலிங்கம்





Tuesday, October 11, 2011

பணத்திற்காக ...

உன் வாழ்க்கையை
விற்கிறாய்
உன் நேரத்தை
விற்கிறாய்
உன் உடலை
விற்கிறாய்
உன் இளமையை
விற்கிறாய்
உன் இனிமையை
விற்கிறாய்
உன் உறவினை
விற்கிறாய்
உன் மரியாதையை
விற்கிறாய்
உன் மானத்தை
விற்கிறாய்
உன் முன்னேற்றத்தை
விற்று முன்னேறுகிறாய்
எல்லாம் பணத்திற்காக....


த. நாகலிங்கம்

என்னை திரும்பி பார்ப்பாயா ?

பெண்ணே உன்னை...
வெண் முகில்கள் வேடிக்கை
பார்க்கின்றன...
மரக்கிளைகள் உற்று
பார்க்கின்றன....
அசுர சூரியன் முறைத்து
பார்க்கிறது...
புற்கள் எல்லாம் அண்ணார்ந்து
பார்க்கின்றன...
காற்று உரசி கொண்டே
பார்க்கிறது....
நானும் பார்கிறேன் உன்னை
வாழ்க்கைக்கு சொந்தமாக்க
எப்போது என்னை திரும்பி
பார்ப்பாய்..... ?

த. நாகலிங்கம்

உருகுதே...

அணு அணுவாய் காதல்
ஊறிக் கிடக்கிறது என்னுள்
உயிருள்ள ஒவ்வொரு பகுதியிலும்
சிதறிக் கிடக்கிறது உன் இளமை
உன்னை உலகம் போற்றும்
அழகி என்று நான் சொல்லேன்
நீ எனக்கு மட்டும் அழகி
ஊர் சொல்லும் பிறகு!
பருவமென்னும் பந்தல் தீப்பிடித்தால்
இளமை கனவுகள் கருகிவிடும்
பெண்ணே நம் இளமை கனவுகள்
பலிக்க நீ என்னுள் சேர வேண்டும்
எட்டாத உயரத்தில் பழம்
பறித்து விடலாம், முயற்சி...
எட்டாத உயரத்தில் நிலா
தொட்டு விடலாம்,விஞ்ஞானம்
கட்டழகி நீ கண் முன் இருந்தும்
முடியவில்லையே உன்னை தொட
உன் கூந்தல் இருட்டு
என் வாழ்வின் வெளிச்சம்
உன் கண்களின் ஒளிக்கதிர்
என் இதயத்தை படம் பிடிக்கும்
x-கதிர்களாய் ....
அதில் நீ இருப்பது தெரிந்தும்
ஏன்? ஏன்? இந்த தயக்கம்... 

த. நாகலிங்கம்


நான் பைத்தியம் ஆனேனே...

நான் குருடன் தான்
உன்னை காணாத முன்பு
நான் செவிடன் தான்
உன் குரல் கேட்காத முன்பு
நான் ஊமை தான்
உன் பெயரை சொல்லாத முன்பு
என் கையும் ஊனம் தான்
உனக்கு கவிதை எழுதாத முன்பு
நான் பைத்தியம் ஆனது
உன்னை காதலித்த
பின்பு தான் பெண்ணே !

த. நாகலிங்கம்

பிப்ரவரி

காலதேவதைக்கும் வஞ்சனையா?
தன் பன்னிரண்டு குழந்தைகளுள்
இரண்டாம் குழந்தைக்கு மட்டும்
குறைந்த ஊட்டம் கொடுத்திருக்கிறாளே!

த. நாகலிங்கம்


புத்தாண்டு

புது உடை உடலுக்கு
புது பண்பு மனதுக்கு
புது உலகம் படைப்போம்
புத்தாண்டு சத்தாண்டாகட்டும்!


த. நாகலிங்கம்

தேவையில்லாத செயல்...

அழுகை தெரியா குழந்தைக்கு
சிரிப்பை கற்காதே!
நிற்க தெரியா மீன்களுக்கு
எழ கற்காதே!
துன்பம் இல்லா ஒருவருக்கும்
இன்பம் கற்காதே!
சோர்வில்லா யாருக்கும்
சுறுசுறுப்பை கற்காதே!
தேவையில்லா வார்த்தைகளுக்கு
தேனை ஊற்றாதே!
தீமை தெரியா மனிதருக்கு
நன்மை கற்காதே!
வேஷம் இல்லா மனிதனுக்கு
பாசம் கற்காதே!
தேவை செயல்களை
தேடி செல்லாதே!

த. நாகலிங்கம்


என்ன பயன் ?

திறமையிருந்தும் என்ன பயன்?
தீரம் இல்லையே !
கடமையிருந்தும் என்ன பயன்?
கவனமில்லையே!
வீரமிருந்தும் என்ன பயன்?
விவேகமில்லையே !
இன்பமிருந்தும் என்ன பயன்?
இனிமை இல்லையே!
நண்பனிருந்தும் என்ன பயன்?
நட்பு இல்லையே!
தேவை இருந்தும் என்ன பயன்?
தேடல் இல்லையே!
ஆசை இருந்தும் என்ன பயன்?
அறிவு இல்லையே!
துணிவு இருந்தும் என்ன பயன்?
பணிவு இல்லையே!
உடல் இருந்தும் என்ன பயன்?
உள்ளம் இல்லையே!
என்ன இருந்தும் நமக்கென்ன பயன்
முன்னேறும் எண்ணம் இல்லையே!

த. நாகலிங்கம்


உயிரும்... உறவும்...

உறவு நிலைத்து
நிற்கும்
உயிர் பிரிந்தாலும்!

த. நாகலிங்கம்