கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Tuesday, October 11, 2011

உருகுதே...

அணு அணுவாய் காதல்
ஊறிக் கிடக்கிறது என்னுள்
உயிருள்ள ஒவ்வொரு பகுதியிலும்
சிதறிக் கிடக்கிறது உன் இளமை
உன்னை உலகம் போற்றும்
அழகி என்று நான் சொல்லேன்
நீ எனக்கு மட்டும் அழகி
ஊர் சொல்லும் பிறகு!
பருவமென்னும் பந்தல் தீப்பிடித்தால்
இளமை கனவுகள் கருகிவிடும்
பெண்ணே நம் இளமை கனவுகள்
பலிக்க நீ என்னுள் சேர வேண்டும்
எட்டாத உயரத்தில் பழம்
பறித்து விடலாம், முயற்சி...
எட்டாத உயரத்தில் நிலா
தொட்டு விடலாம்,விஞ்ஞானம்
கட்டழகி நீ கண் முன் இருந்தும்
முடியவில்லையே உன்னை தொட
உன் கூந்தல் இருட்டு
என் வாழ்வின் வெளிச்சம்
உன் கண்களின் ஒளிக்கதிர்
என் இதயத்தை படம் பிடிக்கும்
x-கதிர்களாய் ....
அதில் நீ இருப்பது தெரிந்தும்
ஏன்? ஏன்? இந்த தயக்கம்... 

த. நாகலிங்கம்


No comments:

Post a Comment