கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Tuesday, October 11, 2011

மறக்க மறுஜென்மம் வேண்டும்...

கனவிலும் காயம்பட்டு
வலிக்குதே என் இதயம்
நினைத்துவிட்டேன் உன்னை
மறக்க மறுஜென்மம் வேண்டும்

காதலாகி இனித்து
கசந்ததே வாழ்க்கை
பேதலித்த மனம்
இன்னும் தெளியவில்லையே

அமுதத்தை கண்டேன்
உன் சிரிப்பில்
இன்பத்தை பெற தவிக்கிறேன்
கிடைக்காது என்று தெரிந்தும்

உன் பாறை மனதை
உளி வைத்து செதுக்க
நான் சிற்பி அல்ல
உன் இதயம் இரும்பா?

நிலா போன்ற முகமென்றல்
களங்கம் தானே
களங்கம் உன் முகத்திலில்லை
மனதில் தான்

பணம் தான் உன் தாய் மொழி
பிறகு மனம்
அயல் மொழி தான்
உன் பாஷையில்

இனிப்பு கூட ஒரு நாள்
கசந்து போக கூடும்
என் நினைப்பு
அப்படியில்லை... உன்னை
மறக்க மறுஜென்மம் வேண்டும்

த. நாகலிங்கம் 

No comments:

Post a Comment