கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Tuesday, October 11, 2011

ஓடு..ஓடு..ஓடு..

இளைஞனே
உலகில் உயர்ந்தவன் யார்?
அது நீ தான் நீ தான்
பலத்தில் பெரியவன் யார்?
அது நீ தான் நீ தான்
அறிவில் சிறந்தவன் யார்?
அது நீ தான் நீ தான்
மனதில் தெளிந்தவன் யார்?
அது நீ தான் நீ தான்
கனவு கான் முன்னேறுவாய்
அது கலாம் சொன்னது
உன் நம்பிக்கைக்கு உலகம்
சலாம் போடுது
தினமும் அறிவுக்கு தீனி போடு
வாழ்வில் முன்னேறு மானத்தோடு
உன்னை தீர்மானிப்பது காலக்கோடு
தவறு செய்தும் திருந்தாதது வெட்கக்கேடு
தெரிந்தே செய்தால் உலகை
விட்டே ஓடு..ஓடு..ஓடு..

த. நாகலிங்கம் 

No comments:

Post a Comment