கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Sunday, October 23, 2011

நீ தான் என் புதுமை.....

என்னுயிர் தேவி உன்னுயிர் நான் தான்
உன்னாலே நானும் இன்று வாழ்கிறேன்
நெஞ்சில் உன் ஆசையை
கண்ணில் நான் பார்க்கிறேன்
என் ஆயுள் உன்னோடு வாழுமே

காதல் நெஞ்சம் என்னிலே
கானம் ஒன்றை கேட்குதே
நீயே எந்தன் காதல் கானம்
நான் உன்னிலே...

உண்மை காதல் எந்நாளும்
உயிரில் இறக்கும் ....
காதல் காமம் என்று சொன்னால்
அதையும் உடைக்கும்
நீ தான் என் இனிமை....

வாழ்க்கை என்னும் தீவையே
நாமும் கண்டு வாழலாம்
நீயும் நானும் ஓன்று சேர்ந்து
தீவை வளர்க்கலாம்
உந்தன் கனவில் எந்தன்
கண்கள் ஒன்றாய் சேரும்
உயிர்கள் ரெண்டும் சேரும் போது
உறவே சிறக்கும்
நீ தான் என் புதுமை.....

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment