கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Saturday, October 22, 2011

உன்னால் முடியும்... தம்பி... தம்பி...

உன்னாலே முடியாதோ என்னாலே முடியாதோ
ஒன்றாக நாமும் சேர்ந்தால் எல்லாம் முடியாதோ
கையுண்டு காலுண்டு உனக்கான அறிவுண்டு
நேர்மைக்கு வாழ்க்கை பட்டால் வெற்றி நமக்குண்டு
உலகுக்கு இளைஞர் கூட்டம்
வலிமைக்கு வழிகள் காட்டும்
உனக்கான தேகம் மட்டும்
உரிமைக்கு வளமை மீட்டும்

எதனாலே பூமி வந்து நாமமும் பிறந்தோம்
ஜென்மங்கள் நூறு வேண்டி தெய்வம் தொழுதோம்
உன் கையில் மட்டும் தானே உந்தன் செல்வங்கள்
உசுராகி உலகமெல்லாம் உன்னை பரப்பும்
உனக்காக வாழாமல் நீ ஊருக்காக வாழ்ந்து வந்தால்
உன் பின்னே மக்கள் கூட்டம் வாழ்த்து கொடுக்கும்
நாட்டுக்கு நல்ல பனி திட்டங்களை ஏந்தி கொண்டு
சேவைக்கு உன்னை தந்து வாசம் பரப்பு
என்ன கொண்டு வந்தோம்
என்ன கொண்டு செல்வோம்
கைகளோடு கைகள் கோர்த்து ஒன்றாக வாழ்வோம்

முன்னோர்கள் கற்று தந்த வாழ்க்கை நமக்கு
முக்காலம் சென்றாலுமே வாழ்த்து கொடுக்கும்
பெட்டிக்குள் தூங்க செல்லும் செல்வம் நமக்கு
பாதாளம் பாயும் என்னும் பொய்கள் எதற்கு
ஏழையின் கண்ணீரையும் செந்நீரோடு ஓடச் செய்து
குளிர்காயும் ஆளுங்கூட்டம் வேரை பிடுங்கு
உன்னாலே முடியாதது ஒன்றுமில்லை என்று நம்பு
திடமான நெஞ்சத்தினுள் எல்லாம் துரும்பு
துன்பங்களை வென்று இம்சைகளை கொன்று
இன்பமென்னும் நாட்டுக்குள்ளே ஒன்றாக வாழ்வோம்



த. நாகலிங்கம்

No comments:

Post a Comment