கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Thursday, October 13, 2011

கவிதை குழப்பம்...

துளிர்விடும் அலைகளானவன்
எளிதான காற்றாய் திரிபவன்
யாருக்காவும் கண்ணீர் சிந்தி
பொறுமை காக்க வேண்டாம்
வானவில்லை வளைத்து
கையில் பிடித்தபடி
சூறாவளி மலர்ந்த சமுத்திரம்
சமுத்திரம் பிளந்துருக்கிய பூ
உருவாக்கி இருக்கலாம் நீ
அல்லது கண்டும் காணாமலும்
இருக்கலாம்... நதி ஓட்டத்தில்
நீந்த தெரியாமல் சிக்கி
தவிக்கும் மெல்லிய பாறை நான்
இருண்மை என்பது வெளிச்சம்
வெளிச்சம் என்பது இருண்மை
என் திசை பிசகிவிட்டது
என் வாழ்க்கை
உயிரின் திறவுகோளாய் இன்பம்
தட்டுங்கள் மூடப்படு
மூடுங்கள் வழி விடும்
வேண்டாத வேளைகளில்
துளிர் விடாமலும் போகலாம்
குழந்தை உணராது பூமி வந்ததை
இறப்பு உணர்த்தாது வானம்
செல்வதை... இது போல் தான்
நட்பின் இடைவெளியும்
உணர்த்தாது உள்ளத்தின்
குமுறலை...



த. நாகலிங்கம்

No comments:

Post a Comment