கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Tuesday, October 11, 2011

பறந்துவிட்டது...

விளக்கமறியாமல் விழுந்த இடத்தை
விட்டு விலகிச் சென்றேன்
விளங்கியவுடன் அதே இடத்தில்
விழலாமோ என்ற சிந்தனை

மீண்டும் அடிபட்டால் என்ன செய்வேன்
மீளா துயரத்தில் படுவேனோ
மீன் பிடிக்க கற்பனை கடலில் வலை
மீட்டினேன் கிடைத்ததோ வெறும் கனவு

வழிகாட்ட கண்களிருந்தும் என்
வழக்கத்திற்கு மீறிய வலை வீசி
வாழ்வை இழந்தேனோ
வான் தேவதையே வழி என்ன?

தேடாமல் வந்ததே இன்று
தேடுகிறேன் காணவில்லை
தேங்கி நிற்கும் ஆசைகளை
தேவையாக்கி கொள்வேனோ?

கிடைத்ததை ஆளாமல்
கிடப்பில் போட்டேனோ
கிளிஎன்னும் அறிவதனை- பூனைக்
கிட்டேனே, இனி
புலம்பி என்ன பயன்? 



த. நாகலிங்கம் 

No comments:

Post a Comment