உலகினிலே ஒரு தெய்வமே
எந்தன் தேவனே
என்றும் இறையருளே...
கண்கள் மூடியே
உன்னை காண்கிறேன்
சுகமாகிறேன் வழி தெரிகிறதே...
பிறப்பினில் உந்தன்
சிறப்பினை பாட
வல்லமைகள் என்றும்
என்றும் அருள்வாய்
கருவினில் என்னை
தத்தெடுத்த தெய்வம்
உந்தன் வழி எந்தன் வாழ்வாகும்
கவிதையிலே நீ இருப்பாய்
காலங்களில் உயிர்த்தெழுவாய்
கல்வியா... செல்வமா...
யாவுமே... நீ தான்...
உலகினை படைத்தாய்
உயிரினை கொடுத்தாய்
உண்மைகளை அங்கும்
இங்கும் விதைத்தாய்...
கலைகளின் தெய்வம்
கருணையின் உருவம்
கண்ணெதிரில் இன்பம் தந்த
தலைவன்....
உருகி நின்றால் அருள் பொழிவாய்
மாயைகளை புரிய வைப்பாய்
உன்னிடம் கற்றது...
வாழ்வினை தந்தது...
எந்தன் தேவனே
என்றும் இறையருளே...
கண்கள் மூடியே
உன்னை காண்கிறேன்
சுகமாகிறேன் வழி தெரிகிறதே...
பிறப்பினில் உந்தன்
சிறப்பினை பாட
வல்லமைகள் என்றும்
என்றும் அருள்வாய்
கருவினில் என்னை
தத்தெடுத்த தெய்வம்
உந்தன் வழி எந்தன் வாழ்வாகும்
கவிதையிலே நீ இருப்பாய்
காலங்களில் உயிர்த்தெழுவாய்
கல்வியா... செல்வமா...
யாவுமே... நீ தான்...
உலகினை படைத்தாய்
உயிரினை கொடுத்தாய்
உண்மைகளை அங்கும்
இங்கும் விதைத்தாய்...
கலைகளின் தெய்வம்
கருணையின் உருவம்
கண்ணெதிரில் இன்பம் தந்த
தலைவன்....
உருகி நின்றால் அருள் பொழிவாய்
மாயைகளை புரிய வைப்பாய்
உன்னிடம் கற்றது...
வாழ்வினை தந்தது...
No comments:
Post a Comment