கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Tuesday, October 11, 2011

தேவையில்லாத செயல்...

அழுகை தெரியா குழந்தைக்கு
சிரிப்பை கற்காதே!
நிற்க தெரியா மீன்களுக்கு
எழ கற்காதே!
துன்பம் இல்லா ஒருவருக்கும்
இன்பம் கற்காதே!
சோர்வில்லா யாருக்கும்
சுறுசுறுப்பை கற்காதே!
தேவையில்லா வார்த்தைகளுக்கு
தேனை ஊற்றாதே!
தீமை தெரியா மனிதருக்கு
நன்மை கற்காதே!
வேஷம் இல்லா மனிதனுக்கு
பாசம் கற்காதே!
தேவை செயல்களை
தேடி செல்லாதே!

த. நாகலிங்கம்


No comments:

Post a Comment