கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 24, 2011

நானே நீ தானே....நீயே நான் தானே

படைத்தேனே என்னை படைத்தேனே
உன்னில் என்னை வளர்த்தேனே....
இறைவன் உன்னை படைத்தானே
என் உயிரை உன்னிடம் அடைத்தானே

தெருவினில் உன்னை பிடித்தேனே
உறவினில் உன்னை வடித்தேனே
காலம் எல்லாம் ஒன்றாய் பிறக்க
காதல் கடிதம் வடித்தேனே...
உன் முகத்தை நானும் பார்க்கையிலே
ஒவ்வொரு அணுவிலும் வலிக்கிறதே...
நீயும் வந்து உன்னை தந்து
வலியை சேர்ந்து அனுபவிப்பாய்
புனிதம் நீ தானே என் புதினம்...
நீ தானே என் உயிரில்
என் இளமை வெடித்திடும் சரி தானே...

எண்பது தடைகள் வந்தாலும்
எண்ணியதை நான் முடிப்பேனே
காண்பது எல்லாம் கனவாய் சென்றால்
கனவை நானும் உடைப்பேனே
என் ரத்தம் மண்ணில் பாய்ந்தாலும்
உன் ரத்தம் என்னில் உயிர் கொடுக்கும்
உள்ளம் என்னும் உரம் கொண்டு
செடியாய் காதலை வளர்ப்பேனே...
நானே நீ தானே....நீயே நான் தானே
என் இளமை உன் இளமை
ஒன்றாய் சேரும் வரம் தானே.....

த. நாகலிங்கம்


No comments:

Post a Comment