கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Tuesday, October 25, 2011

உன் வார்த்தை என்னோடு தீ தான்....

இளந்தென்றல் என் நெஞ்சில் கவிதையாய் மாறும்
கரும்பூக்கள் பூக்கின்ற உலகத்தை தேடும்
கடல் நுரையில் உன்னை செதுக்க காதல் உளி போதும்
தாமரையின்  மொட்டுக்குள் நாம் வாழ தோணும்
இது தானே காதல் இதயங்கள் மோதல்
கூண்டோடு பறக்கின்ற இரு பறவை கூடல்

காதோரம் தேனான உன் சிணுங்கள் மொழியால்
கட்டுடம்பு உருகியது உன் பார்வை விழியால்
கல்லூரி கலர் கனவு காலங்கள் விழுங்கும்
கரம் சேர உன் ஆவல் என்னோடு மயங்கும்
கருவான நம் காதல் உருகாக நீ தான்
கனிவான உன் வார்த்தை என்னோடு தீ தான்.


த. நாகலிங்கம்


No comments:

Post a Comment