கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Sunday, October 23, 2011

அன்பான தோழிக்கொரு....

அன்பான தோழிக்கொரு
நட்பாலே வாழ்த்து பாடினேன்
தானா தானா  தானா
உன்னாலே நானும் பெற்ற
இன்பங்கள் எண்ணி பார்க்கிறேன்
தானா தானா  தானா
சொந்தங்கள் எல்லாம்
உன்னாலே தானே
சொர்க்கத்தில் வாழும் நம்மாலே
தானே தானே....

யார் யாரோ வந்தார்கள்
நண்பர்கள் என்றார்கள்
பொய்யான வார்த்தை நம்பி
ஏமாந்தேன் சில காலம்
உயிர் என்று சொன்னார்கள்
உறவாக நின்றார்கள்
துன்பத்தில் நானும் பார்த்தேன்
ஓடோடி சென்றார்கள்
நீ தானே என்னோடு
உண்மைகள் தந்தாயே
நானென்ற வார்த்தைக்குள்ளே
நீயாகி நின்றாயே
உன்னை பிரியா வரமும் ஒன்றை
வேண்டுகின்றேன்..
யாராலும் பிரிக்கா சக்தி
தேடுகின்றேன்...
உன்னோடு இணையாத நட்பொன்றும்
நட்பல்ல....

ஆணோடு நட்பென்றால்
பெண்ணுக்கு அவமானம்
சமூகத்தின் வார்த்தையெல்லாம்
நம்மாலே உடைபடுமே...
சமுதாய பார்வைகளில்
நட்புக்கு இழிவென்றால்...
போராடி வெற்றி காண்போம்
நட்போடு இறந்திடுவோம்
நம் நட்பு காதலாக மாறாது..
எந்நாளும்...
காதலாக மாறும் நட்பு
ஒருபோதும் உண்மையில்லை
இது தானே நானும் கண்ட உண்மை மொழி
பழுக்காத வயசுக்கெல்லாம் செம்மை மொழி
முடியாது நட்பென்னும் இதமான ஆரம்பம்..

த. நாகலிங்கம்



No comments:

Post a Comment