தவிக்கும் இள மனங்கள்
தங்கும் இடம் எத்தனையோ
தளராத விந்தை மனம்
தத்தளிக்க செய்ததுவோ
இளவேனிற் காலமதில்
இமைக்காத சொந்தமத்தில்
இருளாலே வார்த்தை சொன்னேன்
இல்லாமல் இல்லை என்றாய்
அன்பான நீல தெய்வம்
ஆசை கணை விட்டுவிட்டான்
ஆருயிரே வந்து விடு
அடைந்து என்னில் இன்பம் கொடு
தேவாதி தேவனுக்கே இந்த
தேனான சொந்தமதில்
தேவாமிர்தம் என்றே இன்னும்
தேடாமல் விடவும் இல்லை
கண்ணாலே காட்டிவிட்டாய்
கரத்தாலே ஏற்றிவிட்டாய்
கல் மனதை வெம்மையாக்கி
காரம் என ஒதுங்கி விட்டாய்
தவறான உன் கணிப்பை
தயங்காமல் சொல்ல வந்தேன்
தணியாத இன்பமதில் இனிப்பே
தஞ்சம் அடைந்து கிடக்கு
ஆசை என்றும் நரைப்பதில்லை
மீசை இங்கு துளிர் விடவே
கால நேரம் வந்ததுவே
கலையாத என் கனவை
கருமையாக்கி செல்லாதே
சிற்றின்பம் பேரின்பம்
என்னவென்று அறிந்துவிட
துளிர்மனசு துடிக்கிறது
அது துடி துடித்து
வெடிக்கிறது
முக்தி வரம் தந்து விடு
மன் மத மனசு...
த. நாகலிங்கம்
தங்கும் இடம் எத்தனையோ
தளராத விந்தை மனம்
தத்தளிக்க செய்ததுவோ
இளவேனிற் காலமதில்
இமைக்காத சொந்தமத்தில்
இருளாலே வார்த்தை சொன்னேன்
இல்லாமல் இல்லை என்றாய்
அன்பான நீல தெய்வம்
ஆசை கணை விட்டுவிட்டான்
ஆருயிரே வந்து விடு
அடைந்து என்னில் இன்பம் கொடு
தேவாதி தேவனுக்கே இந்த
தேனான சொந்தமதில்
தேவாமிர்தம் என்றே இன்னும்
தேடாமல் விடவும் இல்லை
கண்ணாலே காட்டிவிட்டாய்
கரத்தாலே ஏற்றிவிட்டாய்
கல் மனதை வெம்மையாக்கி
காரம் என ஒதுங்கி விட்டாய்
தவறான உன் கணிப்பை
தயங்காமல் சொல்ல வந்தேன்
தணியாத இன்பமதில் இனிப்பே
தஞ்சம் அடைந்து கிடக்கு
ஆசை என்றும் நரைப்பதில்லை
மீசை இங்கு துளிர் விடவே
கால நேரம் வந்ததுவே
கலையாத என் கனவை
கருமையாக்கி செல்லாதே
சிற்றின்பம் பேரின்பம்
என்னவென்று அறிந்துவிட
துளிர்மனசு துடிக்கிறது
அது துடி துடித்து
வெடிக்கிறது
என்னான எந்தன் அன்பே
வந்து என்னில் புகுந்து விடுமுக்தி வரம் தந்து விடு
மன் மத மனசு...
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment