கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Thursday, October 13, 2011

தமிழா... தமிழுக்குள் முடங்காதே..

விதைத்தது தான் அறுவடையாகும்
என்னுள் தமிழை விதைத்தவர்கள்
ஆங்கில அறுவடையில் தள்ளி விட்டார்கள்
தமிழ் வழியில் பயின்ற நான்
கல்லூரியில் ஆங்கில வழியில்
கண்ணை கட்டி காட்டில் விட்டாலும்
கண்ணை பிடுங்கவில்லை
காலங்கள் அலை கழித்தன
வெறுமைகள் வாட்டி எடுத்தன
கருணை கொலைக்கு கடிதம்
போட்டேன் கனவு காணுங்கள்
என்னும் பதில் வந்தது
நானும் கனவுக்குள் கபடி
ஆடினேன் மூச்சை பிடித்தது
 தான் மிச்சம்.......
முயற்சிகளில் சிக்கி
சின்ன பின்னமானேன்
வெளிச்ச மலர் மலர்ந்தது
தமிழுக்குள்  முடங்க வேண்டாம்
தமிழன்....
முழங்க வேண்டும் தமிழை
அரசில் ஆதாயம் தேடும்
கள்வர்கள் மத்தியில் தமிழுக்கு
வளர்ச்சி கிடைக்காது..
பிற மொழி படித்து
தமிழ் மொழி வளர்ப்போம் 

த. நாகலிங்கம்

 

 

 

 

No comments:

Post a Comment