கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 24, 2011

ஒரு பாடல் கவியானது...

அணு அணுவாய் என் இதயம் உயிர் வாங்குதே
ஆசையாலே என் இளமை ஆர்பரிக்குதே
கனவாலே என் இமைகள் கரைந்தோடுதே
கருவிழியை உன் பிம்பம் சிவப்பாக்குதே

ஆண்: நீ தானே சூரியன் நான் பூமியாகிறேன் 
           தன்னாலே சுற்றியே உன்னை நான்  பார்க்கிறேன்
           வாராதோ மீன் என்று வெண் கொக்காய் வாழ்கிறேன்
           விழலோடு நெற்கதிராய் முதிராமல் நிற்கிறேன்
           கரு மீன்கள் கடல் நீரை நிறம் மாற்ற கூடுமோ?
           வானத்தை சூரியனும் நெருப்புக்கிரை ஆக்குமோ?
           நீ எந்தன் சூரியனாய், நான் உந்தன் கரு மீனாய்
           காலங்கள் கடந்து நாம் காவியம் பாடுவோம்
           பரம்பரையை தொடர புது ஓவியம் தேடுவோம்...

பெண்: நீ தானே என் கடவுள் நான் பக்தை ஆகிறேன்
           ஆண்டாளாய் உருமாறி உன்னோடு சேர்கிறேன்
           சுட்டாலும் வெண் சங்கு நிறம் போலே வாழ்கிறேன்
           கொதித்தாலும் பால் சுவையும் குன்றாமல் இருக்கிறேன்
           ஒரு செடியில் பல வண்ண பூக்கள் தான் பூக்குமோ
           பூ மதுக்கள் வண்டில்லாமல் தேனாக மாறுமோ
           நீ எந்தன் தேன் வண்டாய் நான் உந்தன் பூ செடியாய்
           வார்த்தைகளே இல்லாத கவியாக வாழுவோம்
           பின்னோர்கள் நம் புகழ் உணர புதுக் கவிதை தேடுவோம்

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment