கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Tuesday, October 11, 2011

என்ன பயன் ?

திறமையிருந்தும் என்ன பயன்?
தீரம் இல்லையே !
கடமையிருந்தும் என்ன பயன்?
கவனமில்லையே!
வீரமிருந்தும் என்ன பயன்?
விவேகமில்லையே !
இன்பமிருந்தும் என்ன பயன்?
இனிமை இல்லையே!
நண்பனிருந்தும் என்ன பயன்?
நட்பு இல்லையே!
தேவை இருந்தும் என்ன பயன்?
தேடல் இல்லையே!
ஆசை இருந்தும் என்ன பயன்?
அறிவு இல்லையே!
துணிவு இருந்தும் என்ன பயன்?
பணிவு இல்லையே!
உடல் இருந்தும் என்ன பயன்?
உள்ளம் இல்லையே!
என்ன இருந்தும் நமக்கென்ன பயன்
முன்னேறும் எண்ணம் இல்லையே!

த. நாகலிங்கம்


No comments:

Post a Comment