கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 17, 2011

வாருங்கள் உலகை காப்போம்...

வெப்பமாகும் உலகத்தை
குளிர்ச்சியூட்ட வாருங்கள்
விந்தையான அறிவியலை
அளவோடு ஆளுங்கள்
பனி பகுதி உருகி நாளும்
கடல் மட்டம் உயருது
புல் பூண்டு அத்தனையும்
கருகி கருகி சாகுது
காலநிலை மாற்றம்கண்டு
கண்டபடி ஓடுது
பருவ மழை பெய்யாமல்
பயிர்கள் எல்லாம் வாடுது..
குளுற்சியூட்டும் சாதனங்கள்
ஒசோனை ஓட்டை போடுது
புற ஊதா கதிர்களெல்லாம்
பூமியை நேராய் தாக்குது
வெப்பம் தங்கி
வெப்பம் தங்கி
உலகம் சூடாகுது
அளவுக்கதிக வாகனகள்
கக்குகின்ற புகைகளால்
அசுத்தம் பெற்ற காற்றெல்லாம்
சுத்தி சுத்தி பறக்குது
நமக்கான உபகரணங்களை
அளவோடு ஆளுங்கள்
வீடுகளில் மரம் நட்டு வளர்த்து
நீங்கள் பாருங்கள்
மின்சாரத்தை தினந்தோறும்
தேவையோடு ஆளுங்கள்
மிதிவண்டி பயன்படுத்தி
ஆரோக்கியமாக வாழுங்கள்..
ஆபத்தில் இருக்கும் உலகத்தை
நாம் தானே காக்கணும் வரும்
சந்ததிகள் நம்மை எப்போதும்
போற்றனும்....
வெப்பமாகும் உலகத்தை
குளிர்ச்சியூட்ட வாருங்கள்
விந்தையான அறிவியலை
அளவோடு ஆளுங்கள்

த. நாகலிங்கம்






No comments:

Post a Comment