உறவான மனம் எல்லாம் உருவாகுதே
இறைவா, உன் பெயராலே கருவாகுதே
சிறகின் நிழலில் கருணை பொழியும்
தலைவா நீ வருவாய் புகழ் சேர
தாய் என்னை மறந்தாலும், துறந்தாலும்
பிரிந்தாலும் நீ என்னை பிரியாத
நிலை வேண்டுமே...
மலை போலே துன்பங்கள் எந்நாளும்
வந்தாலும் பனிபோல துளியாக
உருவாகுமே...
ஆண்டொன்று உன்னை பார்த்தால்
நொடி போலே உருண்டோடும்
அன்பான முகம் கொண்ட திரு நாயகா
ரத்தத்தை ரசமாக்கி தந்தாயே வென்றாயே
பாவங்கள் தசையாலே நீ மாற்றினாய்
உன்னை பாட மொழி ஏது...
அருளாகி பொருளாகி இசையாகி
வரமாகி உலகுக்கு ஒரு தேவன்
நீ தானையா....
இன்பங்கள் உருவாக துன்பங்கள்
பல பெற்ற இறை தெய்வம் நீ இன்றி
வேறேதைய்யா....
ஆசைக்கு அளவாகும் ,உன்னோடு
நான் சேரும் பேராசை வரமொன்று
தருவாயப்பா...
ஒரு கோடி சொந்தங்கள் இருந்தாலும்
கரைந்தாலும் உன் சொந்தம்
ஒன்றுக்கு ஈடாகுமா....
நீ தானே என் பந்தம்...
இறைவா, உன் பெயராலே கருவாகுதே
சிறகின் நிழலில் கருணை பொழியும்
தலைவா நீ வருவாய் புகழ் சேர
தாய் என்னை மறந்தாலும், துறந்தாலும்
பிரிந்தாலும் நீ என்னை பிரியாத
நிலை வேண்டுமே...
மலை போலே துன்பங்கள் எந்நாளும்
வந்தாலும் பனிபோல துளியாக
உருவாகுமே...
ஆண்டொன்று உன்னை பார்த்தால்
நொடி போலே உருண்டோடும்
அன்பான முகம் கொண்ட திரு நாயகா
ரத்தத்தை ரசமாக்கி தந்தாயே வென்றாயே
பாவங்கள் தசையாலே நீ மாற்றினாய்
உன்னை பாட மொழி ஏது...
அருளாகி பொருளாகி இசையாகி
வரமாகி உலகுக்கு ஒரு தேவன்
நீ தானையா....
இன்பங்கள் உருவாக துன்பங்கள்
பல பெற்ற இறை தெய்வம் நீ இன்றி
வேறேதைய்யா....
ஆசைக்கு அளவாகும் ,உன்னோடு
நான் சேரும் பேராசை வரமொன்று
தருவாயப்பா...
ஒரு கோடி சொந்தங்கள் இருந்தாலும்
கரைந்தாலும் உன் சொந்தம்
ஒன்றுக்கு ஈடாகுமா....
நீ தானே என் பந்தம்...
No comments:
Post a Comment