கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Sunday, October 23, 2011

காதலின் தீபம் ஓன்று...

கண்களில் பாசம் கண்டேன்
காதல் தானே என் நெஞ்சில்
ஒரு முறை பார்த்த போதே
என்னையே நானும் தந்தேன்
வானம் தந்த தேவி நீயே

உலகமே உன்னை கண்டால்
ஒளி மயமாக கூடும்
வானவில் வண்ணம் கூட
உன்னிலே தோல்வி காணும்
பூமியில் நீயும் வந்தாய்
பூமியில் நீயும் வந்தாய்
புண்ணியம் ஆகுமே
வைரத்தை உன்னில் கண்டேன்
கண்களாய் மின்னுதே
கொல்வாய் கொல்வாய் பெண்ணே

என்னிலே உன்னை பார்த்தேன்
உன்னிலே நானும் எங்கே
செந்தமிழ் வார்த்தை என்றால்
காதலே என்று சொல்வேன்
வாசங்கள் பூவில் இல்லை
வாசங்கள் பூவில் இல்லை
உன்னிடம் உள்ளதே
தூக்கத்தை வாங்கி சென்றாய்
ராவுகள் நீளுதே
தாராய் தாராய்  உன்னை. 

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment