கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 17, 2011

தொடர்கிறது குழப்பம்....

திசை மாறுகிறது வாழ்க்கை
தினந்தோறும்....
காற்று வீசும் எதிர் திசைக்கு
பறந்தோடுகிறேன்...
வெளிச்சம் குருடாக்கியது
விண்ணை தொட
விண்கலம் செய்
அறிவுரை காதை
செவிடாக்கியது...
யாரை நம்பி என்ன செய்வேன்
செல்லரித்த மனதை
செம்மையாக்க...
வழி தேடி வழி தேடி
தொலைந்து போவதா?
வணக்கம் போட்டு
வணக்கம் போட்டு
வளைந்து போவதா?
தொடர்கிறது குழப்பம்....


த. நாகலிங்கம்

No comments:

Post a Comment