கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Saturday, October 15, 2011

ஆண் விடுதலை...

வேண்டும் விடுதலை
பெண்ணாதிக்கம் ஒழிக..
ஆண்களை அடிமை
படுத்தும் அரக்க குண
பெண்கள் ஒழிக...
வீட்டுக்குள்ளே ஆணை
பூட்டி வைக்கும்
அடிமையை அடியோடு
ஒழிப்போம்........
ஆதாம் டீசிங் செய்யும்
பெண்களை சிறையில்
தள்ளுவோம்....
இது தேவையா?
விழித்து கொள்வோம் ஆண்களே
கொஞ்சி கொஞ்சி பேசி
நெஞ்சிக்குள்ளே பூட்டுவோம்.
குறிவைத்து தாக்கி
பொறி வைத்து பிடிப்போம்
நம் உள்ளத்திலே வளர்ப்போம்
உயிருக்குள் கலப்போம்..
தந்திரம் செய்து
எந்திரம் ஆக்குவோம்..
ஆணும் பெண்ணும் சமம்
என்னும் எழுத்தினை பொறிப்போம்..
உலகத்தை வளர்ப்போம்
பெண்களை மதிப்போம்..

த. நாகலிங்கம்

No comments:

Post a Comment