இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Sunday, October 9, 2011

நிமிட சுகமொன்றும் வாழ்வில்லை

 விழிப்பதற்கான வேலைகளை
இயற்கை கவனிக்க 
என் கண்கள் இமை மூடியும்
காதல் கவிதையை இசைத்தது
கருமேகம் சூழ்திருந்த கனவில்
இன்று விடிவெள்ளியாய் தேவதை 
என்னுடன் இருக்கிறாள்
இசைஎன்றும் சொல்லமுடியாத
வார்த்தைகளை என்னிடம் பயின்றாள்
என் நினைவினை பறித்தாள்                                                           
காற்றினால் தடுமாறிய முல்லைக்கு 
தேர் தந்தான் பாரி 
பருவத்தால் தடுமாறிய 
என் தேகத்திற்கு தேகம் 
தந்தாள் இந்த காரி(கை)
நிமிட சுகமொன்றும் வாழ்வில்லை
தானும் உயிர் நீக்கா துணைபுரியும்
வல்லமை வந்தது எனக்கெங்கே?  
தேடினேன் புரிந்தது
மங்கையின் மனதிற்குள்
புகுந்தவன் என்றும் அவ்வல்லமை
பெற்று உயிர்த்தெழுவான்.....   

த. நாகலிங்கம்               

No comments:

Post a Comment