*உனக்குள்ளே பிறந்தேன்
உயிருடன் வளர்ந்தேன்
உறங்காமல் துடித்தேன்
உலகை புதிதாய் படித்தேன்
*நான் ஒரு ஓவியன்
உன்னை மனமென்னும்
தாளில் கண்ணாகிய
பேனாவால் அழியாமல்
வரைந்து விட்டேன்
நீ தானே என் அழகோவியம்
*தவமே வரமாகி
என் நெஞ்சில் உரமானது
உன் மௌன கண்கள்
பேசியது ஆயிரம் அர்த்தங்களில்
*வீசிய பார்வைகளின்
விவரம் தெரியாமல்
துடித்தேன் - என்
இதய சுவற்றில்
உளியால் உன்னை
செதுக்கி சிலை வடித்தேன்
என் ரத்தம் சாகவில்லை
உன்னால்...
த. நாகலிங்கம்
No comments:
Post a Comment