கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 10, 2011

எதையும் மறந்துவிடாதே

உன் பிறப்பே புகழ் தான்
பிறர் வஞ்ச புகழ்சிகளில்
மயங்கி விடாதே
உன் அறிவதனை
மூலையிலே முடக்கி
விடாதே...
முன் குலாவி பின் இகழ்பவனை
நம்பிவிடாதே- அவன்
நாக விஷம் கொண்டவன்
என்பதை மறந்து விடாதே
அரை குடம் தான் 
தளும்பும் என்று
இருந்து விடாதே 
ஓட்டை குடமும் ஒழுகும்
என்பதை மறந்து விடாதே
பிறர் ஊனம் கண்டு
நீயும் மகிழ்ந்து விடாதே
உனக்கும் ஒரு ஊனம்
உள்ளதை மறந்து விடாதே


த.நாகலிங்கம்
    
   

No comments:

Post a Comment