உன் பிறப்பே புகழ் தான்
பிறர் வஞ்ச புகழ்சிகளில்
மயங்கி விடாதே
உன் அறிவதனை
மூலையிலே முடக்கி
விடாதே...
முன் குலாவி பின் இகழ்பவனை
நம்பிவிடாதே- அவன்
நாக விஷம் கொண்டவன்
என்பதை மறந்து விடாதே
அரை குடம் தான்
தளும்பும் என்று
இருந்து விடாதே
ஓட்டை குடமும் ஒழுகும்
என்பதை மறந்து விடாதே
பிறர் ஊனம் கண்டு
நீயும் மகிழ்ந்து விடாதே
உனக்கும் ஒரு ஊனம்
உள்ளதை மறந்து விடாதே
த.நாகலிங்கம்
No comments:
Post a Comment