கவிதையின் காதலன் உங்களுக்காக கவிதைகள் கொடுத்திருக்கிறேன்... நீங்களும் கவிதை காதலர்களா? கவிதை எழுதுங்கள் ...

Monday, October 10, 2011

ரசனைகள்

வாழ்வின் ரசனைகள் 
பலவிதம், ஒவ்வொன்றும் 
தந்திடும் புது இதம்

ஆரம்பத்திற்கு முன் ரசித்தால் 
ஆவல்கள் - அது
இளமையின் கனவுகள்    
முடிந்த பின் ரசித்தால் 
ஏக்கங்கள் - அதிலும்
இனிமை காண்பவர்கள் 
மனிதர்கள் 
வாழும்போதே ரசித்தால்
வசந்தங்கள் - அதுதான்
வாழ்ந்ததற்கான அர்த்தங்கள்
இறந்தும் ரசிக்க வைப்பது
முயற்சிகள் - அதை
செய்து முடித்தோர்கள் 
அறிஞர்கள்....  

த. நாகலிங்கம்       

No comments:

Post a Comment