இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Sunday, October 9, 2011

மிருக புத்தியை விரட்டு

மனதிற்கு வேண்டும் கட்டுப்பாடு 
மாறினால் உனக்கு வெட்க கேடு 
குடிகாரனிடம் நண்பனாய் இரு
மாறிவிடாதே, மாற்றி விடு 
பணக்காரனிடம் நடப்புக் கொள் 
பணத்திற்கு அல்ல,  குணத்திற்கு
பொறுக்கியுடன் நட்பானாலும் 
எல்லைக்குள் இரு!
நண்பர்கள் துன்பம் தந்தால் 
தாங்கிகொள் , எல்லைமீறினால்
ஒதுங்கிகொள்....
தான் தான் சிறந்தவன் என்று
எண்ணாதே அது  தான்
உன்னை அழிக்கும் கருவி
பணத்தை மதி
மனிதனை மிதிக்காதே
தன் தவறுக்கு வருந்துவதால்
கடவுளாகிறாய்....
மனித மனத்தை சீர்படுத்துகிறாய்.
மீண்டும் மிருக புத்திக்குள்
புதைந்து போகாதே!  

 த. நாகலிங்கம்  

No comments:

Post a Comment