இனி இந்த தளத்தில் கவிதைகள் , கட்டுரைகள் , செய்திகள், சிறுகதைகள், அறிவிப்புகள் .... தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும்...

Friday, October 7, 2011

துளிப்பா

 *இளமை மாறாத
    கனவுகள்.....
     வாழ்க்கை !

*இரவும் இருட்டும்
  வாழ்வும் தாழ்வும்
  முரணல்ல!

*உழுத நிலமும்
  கற்ற மனமும்
  வேறில்லை...

*உயிர் வளர்க்கும்
  உடலுக்குள் ஒரே நிறம்
  குருதி... ஒற்றுமை?

*கல்லுக்கும் கல்வி
   மண்ணுக்கும் மனைவி
    முரண்....

*திசை மாறுவது
  உலகமா? மனிதமா?
  போரிடம் கேள்!

*விலை போகுது
  விளையாட்டு.
   அரசியல்!
       
*இனிப்பு பேச்சு
  கசக்கும்...
  ஜாக்கிரதை!

*ஞானி
  
இனம் புரியாத நட்புகளின்
குணம் புரிந்து கொண்டேன்
நான் தத்துவ ஞானி !

*வெற்று காகிதத்தில்
  ஒற்று பிழையாம்
   குற்றம் சொல்லவே
   பிறந்தவன்!

*தடைகளை மீறி
 தொடைகளில் வாழ்கிறது
 சினிமா !    

த. நாகலிங்கம் 

No comments:

Post a Comment